எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்: மதுரை அருகே தோப்பூரில் ரூ.1,500 கோடி மதிப்பில் நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள 200 ஏக்கர் இடத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப்பின் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டில் கட்டி முடிக்கப்படும் என்றும் இதுகுறித்த திட்ட அறிக்கை முதல்வரிடம் இன்று தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
ஆலோசனை
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் ரூ.1500 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதியுடன் கூடிய அதி நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள 200 ஏக்கர் இடத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் மத்திய,மாநில அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள்.
மத்திய குழுவினர்...
மறைந்த முதல்வர் அம்மாவின் வேண்டுகோளை ஏற்று தமிழகத்தின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு சிறப்பான மருத்துவவசதிகள் கிடைத்திடும் வகையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட ஒப்புக்கொண்ட மத்திய அரசு அதற்கான இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக குழுவினரை தமிழகத்திற்கு அனுப்பி வைத்தது. அதன்படி மதுரை தோப்பூர் உள்ளிட்ட 5 இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்திய குழுவினர் அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்திருந்தது.
மத்திய அரசு அனுமதி...
இந்நிலையில் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் மேற்கொண்ட தீவிர முயற்சியின் பலனாக மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் ரூ.1500கோடி மதிப்பீட்டில் 750 படுக்கை வசதியுடன் 100 இடங்களை கொண்ட மருத்துவக் கல்லூரியுடன் 200ஏக்கரில் அதிநவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திட அனுமதியளித்து மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
நேரில் ஆய்வு...
இதனிடையே தமிழகத்திலுள்ள இரண்டரை கோடி தென்மாவட்ட மக்கள் மற்றும் தென் மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெற்றிடும் வகையில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டதுடன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், மதுரை கலெக்டர் கொ.வீரராகவராவ் மற்றும் மத்திய மாநில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் வரைபடத்தினை பார்வையிட்ட அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேவையான விளக்கங்களை மதுரை கலெக்டர் கொ. வீரராகவராவ் விரிவாக எடுத்துரைத்தார்.
சிறப்பு ஆலோசனை...
இதை தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டார்கள். பின்னர் அமைச்சர்கள், சுகாதாரத்துறை செயலர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு ஆலோசனை கூட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தில் நடைபெற்றது. அப்போது எய்ம்ஸ் மருத்துவமனையை இரண்டு ஆண்டுகளுக்குள் விரைவாக அமைப்பது தொடர்பான பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டது.
நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த ஆய்வின் போது மதுரை புறநகர் மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.,சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், கே.மாணிக்கம், பெரியபுள்ளான் (எ)செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் பி.அய்யப்பன்,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,மாநில எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி எம்.எஸ்.பாண்டியன்,வில்லாபுரம் ஜெ.ராஜா, கு.திரவியம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் வக்கீல் திருப்பதி,தமிழ்ச்செல்வம், ஓம்கே.சந்திரன். முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் வக்கீல் அன்பழகன், மகாலிங்கம்,ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, கட்சி நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ்,நிலையூர் முருகன். கபிகாசிமாயன்,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன். நெடுமாறன், பெரியசெல்வம், கேபிள் பார்த்தசாரதி, வருவாய் கோட்டாட்சியர் அரவிந்தன்,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம்,மதுரை அரசு மருத்துவமனை டீன் டாக்டர்.மருதுபாண்டியன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர் பேட்டி...
ஆய்வுக்குப் பின் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
இந்தியாவில் வளர்ச்சி பெற்ற மாநிலத்தில் முதல்முறையாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவது தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் தான். இதற்கு முன்பாக பின்தங்கிய மாநிலங்களான பீகாரில் பாட்னாவிலும், ஒரிசாவில் புவனேஸ்வர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திடும் தமிழகத்தில் தற்போது அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையான வசதிகள் கொண்டதாக செயல்படும்.
முதல்வர் உத்தரவு
இதற்கு தேவையான அரசு நிலம் 192.7 ஏக்கருக்கு தடையில்லாச் சான்று தயார் நிலையில் உள்ளது. 20 மெகாவாட் மின்சார இணைப்பு தயாராக இருக்கிறது. 5 எம்.எல்.டி தண்ணீர் வழங்கிட அனைத்து வசதிகளும் உள்ளது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்திடும் பணிகளை வேகமாக நடத்தி முடித்திட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தற்போது விதிக்கப்பட்டுள்ள 5 நிபந்தனைகளும் அதற்கான துறை அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து அனைத்து வசதிகளும் முழுமைப்படுத்தப்படும்.
இன்று அறிக்கை தாக்கல்
இந்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பிறகு இது தொடர்பான திட்ட அறிக்கை உடனடியாக தயாரிக்கப்பட்டு நாளையே (இன்று) முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்திடும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் இங்கு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். தோப்பூர் பகுதியில் ஏற்கெனவே நான்குவழிச்சாலை இணைப்பு இருக்கிறது. இந்த இடத்தில் நிலத்தடி நீர்மட்டம் நன்றாக உள்ளதால் தண்ணீர் பிரச்சனை வந்திட வாய்ப்பு கிடையாது. அத்துடன் ஐ.ஓ.சி நிறுவனம் தடையில்லா சான்று வழங்கியுள்ளது. மேலும் நூறு இடங்கள் கொண்ட மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமும் 750 படுக்கை வசதி கொண்ட மிகப்பெரிய மருத்துவமனையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைகிறது.
மல்டி ஸ்பெசாலிட்டி...
இதையடுத்து மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய இடங்களில் தலா 150 கோடியில் மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனைகள் கட்டி முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படவுள்ளது. தமிழக சுகாதாரத்துறைக்கு உலகவங்கி தற்போது ரூ.2685 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நடைபெறவுள்ள சுகாதாரத்துறையின் திட்டங்களுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படவுள்ளது. இத்தகைய சிறப்பு மிகு திட்டங்களால் சுகாதாரத்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்திடும் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
ஸ்டொய்னிஸ் அபார பேட்டிங்:சென்னையை வீழ்த்தியது லக்னோ
24 Apr 2024சேப்பாக்கம்:சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பங்கேற்ற ஆட்டத்தில், 6 விக்கெட்களில் வெற்றி பெற்றது லக்னோ அணி.
-
கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை - 12 பேர் கைது
24 Apr 2024சென்னை:சென்னையில் கள்ளச்சந்தையில் ஐ.பி.எல். டிக்கெட் விற்பனை செய்ததாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பயங்கரவாதிகளை பாதுகாத்தனர் கேரளா பிரசாரத்தில் அமித்ஷா தாக்கு
24 Apr 2024ஆலப்புழா:'கேரளாவில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியின் போது,பயங்கரவாதிகள் பாதுகாக்கப்பட்டனர்' என அமித்ஷா பேசினார்.
-
லாரியஸ் விருதுகள் 2023: ஜோகோவிச் - பொன்மட்டி தேர்வு
24 Apr 2024லண்டன்:லாரியஸ் விருதுகள் 2023-க்கு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதுகளை முறையே ஜோகோவிச் - பொன்மட்டி பெற்றனர்.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
-
தேர்தல் பத்திர விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி வழக்கு
24 Apr 2024புதுடெல்லி:தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட
-
ஐ.சி.சி. டி20 தரவரிசை:சூர்யகுமார் தொடர்ந்து முதலிடம்
24 Apr 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.