முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி - அரியானா, மெட்ரோவின் புதிய பச்சை வழித்தட சேவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டெல்லி முதல் அரியானா வரையிலான மெட்ரோவின் புதிய பச்சை வழித்தட சேவையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

டெல்லியின் முண்ட்காவில் இருந்து, அரியானாவின் பகதூர்கர் வரையிலான 11 கி.மீ. தொலைவு கொண்ட தடத்தில் பச்சை வழித்தட மெட்ரோ ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தனது அலுவலகத்தில் இருந்தபடி காணொளிகாட்சி மூலம் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்தீப் பூரி மற்றும் அரியானா முதல்வர் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நேற்று மாலை 4 மணியில் இருந்து பொதுமக்களுக்காக இந்த புதிய மெட்ரோ ரெயில் சேவை செயல்பட தொடங்கும்.

இந்த திட்டத்தினை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது, பகதூர்கர் பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ளது. அங்கு பல்வேறு கல்வி நிலையங்கள் உள்ளன. அங்கிருந்து மாணவர்கள் டெல்லிக்கு கூட சென்று பயில்கின்றனர். அரியானாவிற்கு நுழைவு வாயிலாக உள்ள இந்த பகுதியில் தொடங்கவுள்ள மெட்ரோ சேவை அனைவருக்கும் மிக பயனுள்ள வகையில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து