முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் - கிம் சந்திப்பு நடந்த ஓட்டலில் உளவு கருவி மூலம் ஒட்டுக்கேட்பு சிங்கப்பூர் அரசு மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

சிங்கப்பூர்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் நடுவே சிங்கப்பூரில் நடந்த சந்திப்பின் போது, உளவு கருவிகளை வைத்து அது ஒட்டுக் கேட்கப்பட்டதாக சிங்கப்பூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை சிங்கப்பூர் மறுத்துள்ளது.

எலியும், பூனையுமாக இருந்த, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு கடந்த 12ம் தேதி சிங்கப்பூரில் நடைபெற்றது. இந்த சந்திப்பை சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்தது. இதற்கு சிங்கப்பூருக்கு சுமார் ரூ.81 கோடி செலவானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செந்தோசா தீவில் ஆடம்பர ஹோட்டலில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் அமெரிக்கா-வட கொரியா நடுவே, அணு ஆயுத ஒழிப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதனிடையே, இரு நாட்டு அதிபர்கள் பேச்சுவார்த்தை நடத்திய ஹோட்டலில் உளவு கருவி மூலம் சிங்கப்பூர் அரசு ஒட்டு கேட்டதாக குற்றச்சாட்டு வைரலாக சுற்றி வருகிறது. இந்த வதந்தியை நிரூபிக்க இதுவரை ஆதாரங்கள் ஏதும் வெளியாகவில்லை. ஆனால், அந்த தகவலை நீங்களே பாருங்கள். இரு நாட்டு அதிபர்கள் சந்திப்பை, செய்தியாக்க உலகெங்கிலுமிருந்து 2500க்கும் மேற்பட்ட நிருபர்கள் அங்கு வந்திருந்தனர்.

செய்தி சேகரிக்க வந்த நிருபர்களுக்கு சிங்கப்பூர் அரசு சார்பில் ஒரு கிஃப்ட் தரப்பட்டது. அதில் பேனா, நோட் பேட், வாட்டர் பாட்டில் மற்றும் ஒரு யூஎஸ்பி மின்விசிறி இருந்தது. அது மிக சிறிய அளவிலானது. யூஎஸ்பி வயரை, லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரிலுள்ள USB port பகுதியில் பொருத்தினால், அந்த ஃபேன் சுழலும். நிருபர்கள் வசதிக்காக இவற்றை சிங்கப்பூர் அரசு கொடுத்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து