முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் கடனாக பெற்ற தொகையை செலுத்தத் தயார் விஜய் மல்லையா கெஞ்சல்

செவ்வாய்க்கிழமை, 26 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: இந்தியாவில் கடனாக பெற்ற தொகையை உடனடியாக செலுத்த தயாராக உள்ளதாக விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.

இந்திய பொதுத் துறை வங்கிகளில் ரூ.9000 கோடி அளவுக்கு விஜய் மல்லையா கடன் பெற்றார். இந்த கடன்களை திருப்பி செலுத்தாமலேயே லண்டனுக்கு கடந்த 2015-2016-ம் ஆண்டில் தப்பி சென்று விட்டார். இதையடுத்து அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வந்தது. மேலும் லண்டன் ஸ்காட் யார்டு போலீசாரால் இரு முறை கைது செய்யப்பட்டு சில விநாடிகளில் ஜாமீன் பெற்றார். இந்நிலையில் லண்டனில் உள்ள மல்லையா தான் பொதுத் துறை வங்கிகளில் பெற்ற கடன்களை திரும்ப செலுத்தவுள்ளதாக கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கைகளையும் அவர் செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து