முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாராக்கடனால் சிக்கல்கள் அதிகரிக்கும்: ஆர்.பி.ஐ

புதன்கிழமை, 27 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

வாராக்கடன் சிக்கல் மேலும் மோசமாகும் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை குறிப்பிடுகிறது. மேலும் அறிக்கையில், ஒட்டுமொத்த வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறை இருண்ட காலமாக காட்சியளிக்கிறது. 2018 மார்ச் இறுதிவரை வங்கிகளின் வாராக்கடன் 11.6 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டு இறுதியில் 12.2 சதவீதமாக அதிகரிக்கும். வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் அதிகரிப்பு காரணமாக வங்கித் துறையின் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

வங்கிகளின் வாராக்கடன் அழுத்தம் காரணமாக தற்போது 11 பொதுத்துறை வங்கிகள் பிசிஏ சட்டத்தின் படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வங்கிகளின் ஒட்டுமொத்த வாராக்கடன் 2018 மார்ச் மாதத்தில் 21 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த 11 வங்கிகள் தவிர மேலும் 6 வங்கிகள் தங்களது மூலதனச் செயல்பாடுகளில் மோசமாக நிலையில் உள்ளன என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து