முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அணு ஆயுத சோதனைக்காக எரிபொருள் உற்பத்தியை பெருக்கும் வடகொரியா - அமெரிக்கா வெளியிட்ட தகவல்

சனிக்கிழமை, 30 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அணு ஆயுத சோதனைக்காக எரிபொருள் உற்பத்தியை வடகொரியா ரகசியமாக சமீபத்தில் அதிகரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்கா கூறியுள்ளது.

டிரம்ப் - கிம் இடையே சிங்கபூரில் நடந்த உச்ச மாநாட்டுக்குப் பிறகு இனி அணுஆயுத சோதனை ஈடுபட போவதில்லை என்று வடகொரியா உறுதி அளித்த நிலையில் இந்த தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

இது குறித்து அமெரிக்க உளவுத்துறை தரப்பில், வடகொரியா சமீப காலமாக அணுஆயுத சோதனைக்காக யுரேனியத்தை அதிகளவில் உற்பத்தி செய்து வருகிறது. வடகொரியா, அமெரிக்காவை ஏமாற்றி வருவதற்கு தெளிவான சான்றுகள் உள்ளன என்று கூறியுள்ளது.

இது பற்றி டிரம்ப் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் இது குறித்து உறுதியான தகவல் கிடைத்த பிறகு கருத்து தெரிவிக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து