முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவிடமிருந்து தேர்தல் நிதி பெற்றதாக வெளியான தகவலுக்கு ராஜபக்சே மறுப்பு

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலின்போது, சீனாவிடமிருந்து தேர்தல் நிதி பெற்றதாக ஊடகங்களில் வெளியான தகவலை அந்த நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:

கடந்த 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, எனது பிரசாரத்துக்காக சீன அரசு எந்தத் தொகையும் வழங்கவில்லை. சீனாவிடமிருந்து நான் தேர்தல் நிதி பெற்றதாகக் குற்றம் சாட்டுபவர்கள், என்னுடன் "தொடர்புடையவர்கள்' மற்றும் "தேர்தல் பிரசார உதவியாளர்கள்' நிதி பெற்றதாகக் குறிப்பிடுகின்றனர். எனினும், நிதியளித்தது யார், நிதி பெற்றது யார் என்பதை அவர்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை.

இதன்மூலம், எந்தவித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் என் மீது குற்றம் சாட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் அவர். 2015-ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின்போது, ராஜபக்சேவின் பிரசார செலவுகளுக்காக சீனா 76 லட்சம் டாலர் (சுமார் ரூ.52 கோடி) அளித்ததாக "நியூயார்க் டைம்ஸ்' நாளிதழ் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து