முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டை இனி பேருந்துகளிலும் பயன்படுத்தலாம் - கெஜ்ரிவால் அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியின் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யப் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டு அட்டையை இனி பேருந்துகளிலும் பயன்படுத்தலாம் என்று கெஜ்ரிவால் அரசு உத்தரவிட்டுள்ளது.

மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய பெறும் அட்டைகளையே பேருந்துகளிலும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை டெல்லி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெல்லோட் அறிவித்தார். ஜூலை 31 முதல் அமலுக்கு வரும் இத்திட்டம் முதற்கட்டமாக 250 அரசு நகரப் பேருந்துகளில் பயன்படுத்தப்பட உள்ளது.

பேருந்துகளில் ஸ்மார்ட் கார்டைப் பயன்படுத்துவதற்கான இயந்திரங்கள் படிப்படியாக அமைக்கப்பட்டு வருகின்றன. டெல்லி மெட்ரோ ரயில்களுக்கான ஸ்மார்ட் கார்டால் பயணிகளின் நேரம் மிகவும் மிச்சமாகிறது. இதை இனி பேருந்தில் பயன்படுத்துவதும் நல்ல பலன் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து