முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் அதற்கு மறுத்து விட்டது.

தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையினால், சுகாதார சீர்கேடு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்  ஏற்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்,

இதையடுத்து, அந்த கடந்த மே மாதம் 28-ம் தேதி அந்த ஆலை மூடப்பட்டது. அதை தொடர்ந்து இந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிமுறைகள் முழுவதுமாக மீறப்பட்டுள்ளதால், ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு அனுமதி அளிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், ஆலையைத் திறக்கக் கோரி மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மாசு கட்டுப்பாட்டு வாரியமும் நிராகரித்தது. ஆலைக்கு வழங்கப்பட்ட மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு இறுதியில் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது.

இதனை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் பசுமை தீர்ப்பாயத்தில் ஒரு மனுவினை தாக்கல் செய்தது. அதில், ஸ்டெர்லைட் நிறுவனம் சுற்றுச்சூழல் விதிகளை முழுமையாக பின்பற்றுவதாகவும், ஆலையில் இருந்து வெளியேறும் புகை அல்லது கழிவுகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்திருந்தது.

இந்த ஆலை மூடப்பட்டால் ஏராளமான ஊழியர்கள் வேலையின்றி தவிப்பதுடன், அவர்களின் குடும்பங்களும் மிகவும் சிரமப்படும் என்பதால் ஆலையை மீண்டும் இயக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரியிருந்தது. மேலும் ஆலையை திடீரென மூடி விட்டதால், ஆலைக்கும், இயந்திரங்களுக்கும் பல்வேறுவிதமான மிரட்டல்கள் வருவதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு நேற்று இடைக்கால நீதிபதி ஜாவத் ரஹீம் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா குழுமம் சார்பில் அரிமாசுந்தரமும் அரசு தரப்பில் வைத்தியநாதனும் வாதிட்டனர். அரிமா சுந்தர் வாதிடுகையில் முன் எச்சரிக்கை ஏதும் இன்றி ஆலையை மூடி விட்டனர். தமிழக அரசு உள்நோக்கத்துடன் ஆலையை மூட அரசாணை பிறப்பித்துள்ளது என்று வாதிட்டார்.

அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கூறுகையில், மாசு கட்டுப்பாடு வாரியம் சோதனை நடத்திய பிறகே ஆலை மூடப்பட்டது என்றார். இதையடுத்து நீதிபதி கூறுகையில், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது. ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வரும் 18-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து