முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுனந்தா புஷ்கர் மரண வழக்கு: சசி தரூரூக்கு நிபந்தனை ஜாமீன்

வியாழக்கிழமை, 5 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு டெல்லி நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சசி தரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ல் டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இறந்து கிடந்தார். இந்த வழக்கில் சசி தரூருக்கு எதிராக கடந்த மே 14-ம் தேதி டெல்லி போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். சுமார் 3,000 பக்க குற்றப் பத்திரிகையில் சசி தரூர் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது.

இந்த வழக்கில் வரும் 7-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சிறப்பு நீதிபதி அர்விந்த் குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிதரூருக்கு முன்ஜாமீன் வழங்கினால் நாட்டை விட்டு வெளியேறி விடுவார் என டெல்லி போலீசார் ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து சசிதரூரின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நேற்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். நேற்றைய விசாரணையின் சசிதரூக்கு முன்ஜாமீன் வழங்கி கோர்ட் உத்தரவிட்டது. ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான ஜாமீன் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். கோர்ட் அனுமதியில்லாமல் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. ஆதாரங்களையும், சாட்சியங்களையும் அழிக்க முயற்சிக்க கூடாது என்பது போன்ற நிபந்தனைகளை அவருக்கு கோர்ட் விதித்து ஜாமீன் வழங்கியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து