முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் நாளை முதல் தென்கொரிய அதிபர் சுற்றுப்பயணம்

வெள்ளிக்கிழமை, 6 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

சியோல்: தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் 5 நாள் பயணமாக இந்தியா வர இருக்கிறார்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் முதல் முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார். நாளை 8-ம் தேதியில் இருந்து வரும் 11-ம் தேதி வரை மூன் ஜே இன் சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக ஏ.என்.ஐ. செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தில் மூன்னுடன் மூத்த தென்கொரிய அதிகாரிகள் உடன் வரவுள்ளனர்.

இந்த சுற்றுப்பயணத்தில் தென் கொரியா - இந்தியா இடையே பல்வேறு தொழில் சார்ந்த கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் கல்வி, மாணவர்கள், சுற்றுலா பயணிகள் குறித்து இரு நாடுகளின் எதிர்காலத் திட்டங்கள் சார்ந்து பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்துகிறார். அத்துடன் இந்தியா - தென்கொரிய ஐடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அவர் சந்திக்க உள்ளார். மூன் ஜே உன்னின் இந்தியப் பயணத்தில் பொருளாதார தளங்களில் விரிவாக்கம் செய்வது குறித்து இரு நாடுகளும் முக்கியத்துவம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து