முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கபினி அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறப்பு

சனிக்கிழமை, 7 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் கபினி அணையிலிருந்து நேற்று 15,000 கன அடி நீர்  திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டியுள்ளது. இந்த மழையால் கபினி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பி விட்டன.  கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக இருக்கிறது. இதனால் கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 15,000 கன அடி நீர் கடந்த ஜூன் 14-ம் தேதி திறக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களுக்கு கபினியில் இருந்து திறந்து விடப்பட்டது. இந்நிலையில் அணையில் தண்ணீரின் அளவு குறைந்ததை அடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கபினி அணையில் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் தற்போது மீண்டும் 15,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து