முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறையில் பிரபல தாதா சுட்டுக்கொலை விசாரணைக்கு உ.பி. முதல்வர் உத்தரவு

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாக்பத் மாவட்ட சிறைச்சாலையில் தாதா ஒருவர் நேற்று காலை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தீவிர விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

முன்னா பஜ்ரங்கி என்ற தாதா ஏற்கெனவே ஜான்சி மாவட்டத்தின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை பாக்பத் சிறைச்சாலைக்கு அவர் கொண்டு வரப்பட்டார். அவர் பாக்பத் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்த வேண்டி இருந்த நிலையில் அதற்குள் சிறை வளாகத்துக்குள்ளேயே பஜ்ரங்கி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இப்படுகொலை சம்பந்தமாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் உறுதியளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க விசாரணைக் குழு ஒன்று பாக்பத் மாவட்ட சிறைச்சாலைக்கு வருகை தந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து