முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தொகுதியில் ரூ.7.20கோடி செலவில் கட்டப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களை பயன்பாட்டுக் கொணர்வு விழா அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 9 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியின் பல்வேறு பகுதிகளிலுள்ள அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ரூ.7.20கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் திறந்து  வைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களின் பயன்பாட்டுக் கொணர்வு விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து கல்லூரியின் புதிய கட்டடத்தை மாணவ,மாணவியரின் பண்பாட்டிற்கென தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பட்டி,பி.அம்மாபட்டி, அ.தொட்டியபட்டி ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கல்வி பயின்று வரும் மாணவ,மாணவ மாணவியர் பயன் பெற்றிடும் வகையில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டித் தந்திட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதை தொடர்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்கொண்ட முயற்சியின் பலனாக திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள அச்சம்பட்டி,பி.அம்மாபட்டி மற்றும் டி.கல்லுப்பட்டி ஒன்றியம் அ.தொட்டியபட்டி ஆகிய இடங்களில் ரூ.7.20கோடி செலவில் அதிநவீன வசதிகள் கொண்ட ஆய்வகம்,பாதுகாப்பு சுற்றுச்சுவர்,கழிப்பறை மற்றும் 16வகுப்பறை கட்டிடம் போன்றவை விரைவாக கட்டிமுடிக்கப்பட்டது.
இதையடுத்து மேற்கண்ட பள்ளிகளில் பயிலும் மாணவ,மாணவியர் வசதிக்காக கட்டிமுடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை கடந்த 2ம் தேதி காணொளி காட்சியின் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிசாமி திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து மேற்கண்ட மேல்நிலைப்பள்ளிகளில்  திறந்து வைக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பயன்பாட்டுக் கொணர்வு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தலைமை வகித்தார். உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன்,திருமங்கலம் வட்டாட்சியர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் வரவேற்றார். ஆயிரக்கணக்கான மாணவ,மாணவியர் கலந்து கொண்ட இவ்விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து அச்சம்பட்டி, பி.அம்மாபட்டி,அ.தொட்டியபட்டி மேல்நிலைப் பள்ளிகளின் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை மாணவ,மாணவியரின் பயன்பாட்டிற்கென தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கே.மாணிக்கம்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,சார்பு அணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், மகாலிங்கம்.ராமசாமி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, திருமங்கலம் ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,அவைதலைவர் அன்னகொடி கட்சி நிர்வாகிகள் செல்வம்,பழனிசாமி,சிவஜோதிதர்மர்,சாமிநாதன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
படம் நெட்டில் உள்ளது: புட்நோட்: திருமங்கலம் தொகுதியில் ரூ.7.20கோடி செலவில் கட்டப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளிகளின் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை பயன்பாட்டுக் கொணர்வு விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்தார்.உடன் எம்.எல்.ஏ.,கே.மாணிக்கம்,மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன்,உசிலம்பட்டி கோட்டாட்சியர் முருகேசன்,முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து