முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 10 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

பெங்களூர் : காவிரியில் இருந்து, தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க, கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டு உள்ளார்.

தொடர் கனமழை...

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் தலைக்காவிரி, பாகமண்டலா, விராஜ்பேட்டை, மடிகேரி, கோணிகொப்பா, சித்தாப்புரா, சுண்டிகொப்பா, சோமவார்பேட்டை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

மேலும் நீர்வரத்து...

இதனால் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜூலை மாதத்திற்கான நீரை உடனே திறக்க கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு, முதல்வர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். எவ்வளவு நீர் திறக்கப்பட வேண்டும் என்று குமாரசாமி அறிவிக்கவில்லை என்றாலும், நேற்று மாலை முதல் மேலும் நீர் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதா தெரிகிறது. ஏற்கனவே தமிழகத்திற்கு விநாடிக்கு 35,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த  நிலையில்  ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள்  குளிக்கவும் , பரிசல்கள் இயக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து