முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனது உத்தரவை அதிகாரிகள் வெளிப்படையாகவே மீறுகின்றனர்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 11 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, அதிகாரிகள் தனது உத்தரவை வெளிப்படையாகவே மீறுவதாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுநருக்கும் இடையில் நடைபெற்று வந்த அதிகார மோதலுக்கு சுப்ரீம் கோர்ட் கடந்த வாரம் தீர்ப்பளித்து முற்றுப்புள்ளி வைத்தது. இதனால், டெல்லி அரசில் எந்த சிக்கலும் இருக்காது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பிரச்சினை இன்னும் நீடித்து வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கெஜ்ரிவால் டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ளார். அதில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

டெல்லி அரசின் உத்தரவை பின்பற்ற வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு வெளிப்படையாகவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அமைச்சர் மற்றும் முதல்வர் பிறப்பிக்கும் உத்தரவை அதிகாரிகள் வெளிப்படையாக பின்பற்ற மறுப்பதை இதுவரை கேட்டதில்லை. இதற்காகத்தான் பா.ஜ.க, அதிகாரிகளுக்கான அதிகாரத்தை தன்னிடமே வைத்துக் கொள்ள விரும்புகிறது.

ரேஷன் பொருட்களை மக்களிடம் நேரடியாக வீட்டுக்கே சென்று கொடுப்பதை பா.ஜ.க. வெட்கமின்றி தடுப்பதை ஒட்டுமொத்த டெல்லியும் கவனிக்க வேண்டும். அடுத்த முறை வாக்களிக்க செல்லும் போது இதனை நினைவில் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து