முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் அருகே நான்கு வழிச்சாலையோரம் இறந்து கிடந்த மயில்: வனத்துறையினர் விசாரணை:

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாலையோரம் மர்மமான முறையில் இறந்து கிடந்த மயிலின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையின் பின் பகுதியில் ஏராளமான மயில்கள் வசித்து வருகின்றன.இந்நிலையில் நேற்று மதியம் கப்பலூர் நான்கு வழிச்சாலையோரத்தில் பெரிய அளவிலான ஆண் மயிலொன்று மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளது.இதனை கண்ட அப்பகுதி மக்கள் மயில் இறந்து கிடக்கும் தகவலை வனத்துறையினருக்கு தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் இறந்து கிடந்த மயிலை மீட்டு ஆய்வு செய்தபோது உடலில் காயங்கள் இருப்பது தெரியவந்தது.இதனால் நான்கு வழிச்சாலையை பறந்து கடந்து சென்றிட முயன்றபோது அந்த மயில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் கால்நடை மருத்துவர்கள் கொண்டு மயிலின் உடலை கூராய்வு செய்த பின்னரே அதற்கான முழு விபரம் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து