முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலி கணக்குகளை நீக்கியதால் டுவிட்டரில் பின்தொடர்வோர் ஒரு லட்சம் பேரை இழந்தார் ட்ரம்ப்

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்க அதிபர்  டிரம்பை, டுவிட்டரில் பின்தொடர்வோரில் ஒரு லட்சம் பேரின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

சமூக வலைதளமான டுவிட்டரில் போலி கணக்குகள், சந்தேகத்துக்குரிய கணக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன. கடந்த மே, ஜூன் மாதங்களில் மட்டும் 7 கோடிக்கும் மேற்பட்ட டுவிட்டர் கணக்குகள் நீக்கப்பட்டன. இதன் காரணமாக அரசியல் தலைவர்கள், நட்சத்திரங்களை டுவிட்டரில் பின்தொடர்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் டுவிட்டரில் அதிகம் பேரால் பின்தொடரப்படும் பிரபலங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முதலிடம் பிடித்தார். அவரை 5.34 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

டுவிட்டரில் போலி கணக்குகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் டிரம்பை பின்தொடர்வோரில் சுமார் ஒரு லட்சம் பேர் குறைந்துள்ளனர். இதேபோல அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவை பின்தொடர்வோரில் சுமார் 4 லட்சம் பேரின் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. மக்களிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் வகையில் போலி கணக்குகள் நீக்கப்படுவதாக டுவிட்டர் துணைத் தலைவர் டெல் ஹார்வி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து