முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடிப்பேன் குல்தீப் யாதவ் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 13 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதாக 6 விக்கெட் வீழ்த்திய குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

ஆட்ட நாயகன் விருது
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 6 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இடதுகை சுழற்பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். இந்திய பவுலர்கள் சிறந்த பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 4-வது இடத்தை பிடித்தார். ஆட்ட நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் கூறியதாவது:-

நம்பிக்கை உள்ளது...
நான் எனது பந்து வீச்சை சிறப்பான முறையில் தொடங்கினேன். அதிர்ஷ்டவசமாக தொடக்கத்திலேயே சில விக்கெட்டுகளை கைப்பற்றினேன். என்னை பொறுத்தவரை எங்கு விளையாடுகிறேன் என்பது பற்றி கவலை இல்லை. ஆடுகளத்தில் பந்து சற்று திரும்புவதை உணர்ந்தேன். இதில் உங்கள் பந்தில் வேறுபாடுகளை காட்டினால் அது பேட்ஸ்மேன்களுக்கு கடினமாக இருக்கும். டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து