முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பஹ்ரைனில் தூதரக வளாகம் சுஷ்மா திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

பஹ்ரைன்: பஹ்ரைன் நாட்டுக்கு 2 நாள் அரசுமுறை பயணமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சென்றுள்ளார்.

தலைநகர் பனாமா சென்ற சுஷ்மா ஸ்வராஜுக்கு பஹ்ரான் நாட்டு அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, பனாமாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக வளாகத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், புதிதாக கட்டப்பட்டுள்ள தூதரக வளாகம், இரு நாடுகளிடையேயான வரலாற்று தொடர்பின் அடையாளமாக திகழும் என்றார்.

இந்தியாவின் 5-வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடாக பஹ்ரைன் திகழ்கிறது. அந்நாட்டுக்கு சுஷ்மா ஸ்வராஜ் சுற்றுப்பயணம் சென்றிருப்பது இது 3-வது முறையாகும். பஹ்ரைனில் இந்தியர்கள் சுமார் 4 லட்சம் பேர் வசிக்கின்றனர். இது பஹ்ரைன் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 4-ல் ஒரு பங்கு ஆகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து