எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்: சாதாரண தொண்டனாக பொதுவாழ்வை தொடங்கி நாட்டுப்பணியையே உயிர்மூச்சாக கொண்டவர் கர்மவீரர் காமராஜர் என்று விருதுநகரில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
விருதுநகரில் காமராஜர் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது,
115 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் குமாரசாமி - சிவகாமி அம்மையார் தம்பதிக்கு மகனாக பிறந்த ஒரு சிறுவன், தன்னுடைய தந்தையின் மறைவுக்குப் பிறகு பள்ளிக்கு செல்ல முடியாமல், தாய்மாமன் கருப்பையா நாடாரின் துணிக் கடைக்குப் போக வேண்டிய சூழ்நிலையிலும், தவறாது ஞானம்பிள்ளையின் பொடிக் கடைக்கு பத்திரிகைகளை படிப்பதற்காகவே போவான். அங்கு வரும் பத்திரிகைகளை ஆர்வத்துடன் படிப்பான், அரசியல் பற்றி மற்றவர்களுடன் விவாதிப்பான். இந்த சிறுவனுக்கு அரசியல் அக்கறை வேண்டாமென்று அவரது பாட்டி கூறுவார். அதற்கு அந்த மாணவன், நான் ஒன்று சொல்லுகிறேன் பாட்டி. நம்ம எண்ணெய் கடை பெரியசாமி அண்ணாச்சி வீட்டில் இருக்கிற நாய் மிகவும் அழகாக இருக்கிறது. ஆனால் அந்த நாய் நம் வீட்டிற்குள் நுழைந்தால் முதலில் விரட்டுபவர்களே நீங்கள்தான் பாட்டி, அதே மாதிரிதான் வெள்ளைக்காரன். நம்ம நாட்டிலே அவனுக்கு என்ன வேலை? அதிகாரம் செய்கிறான். அதைக் கண்டிக்காமல் எப்படி விடுவது பாட்டி? என்றான் அந்த சிறுவன். அச்சிறுவன் தான் பிற்காலத்தில் நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த பெருந்தலைவர் காமராசர்.
மகாத்மா காந்தியின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுதந்திரப் போராட்டம் பற்றி பத்திரிகையின் மூலமும், விருதுநகரில் உள்ள பம்பாய் அண்ணாச்சி என்றழைக்கப்பட்ட கோவிந்த நாடாரின் மூலமும் தெரிந்து கொண்டார். இதனால் நாட்டின் மீதும், தேசியத் தலைவர்கள் மீதும், பற்றும் பக்தியும் ஏற்பட்டது. இதன் மூலம் மகாத்மா காந்திஜியின் மானசீக தொண்டனாகவே மாறினார். இதன் விளைவாக தனது 16-வது வயதில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தபின், தீரர் சத்தியமூர்த்தி அவர்களை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டார். 1930-ம் ஆண்டு நடைபெற்ற உப்புசத்தியாகிரக போராட்டத்தில் பங்கு கொண்டு சிறை சென்றார். பின்னர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் போன்ற பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார். அவர் தனது இளமைக் காலத்தில் 9 ஆண்டுகளை சிறையிலேயே கழித்து, தனது வாழ்வை நாட்டுக்காகவே அர்ப்பணித்தார்.
இவர் 1936-ம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ஆனார். பின்னர் 1940-ம் ஆண்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954-ம் ஆண்டு வரை அந்த பொறுப்பினை வகித்தார். 1940-ம் ஆண்டு விருதுநகர் நகராட்சிக்கு நடந்த தேர்தலில், காமராசர் சிறையில் இருந்து கொண்டே வெற்றி பெற்றார். பின்னர் 1941-ம் ஆண்டு அந்த நகராட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளிவந்த பின் நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னும் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபடுவதில் அவருடைய நாட்டம் இருந்ததால், அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இவர் முதன்முதலில் 1937-ம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் மீண்டும் 1946-ம் ஆண்டில் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர் 1952-ம் ஆண்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1954-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் நாள் தமிழ்புத்தாண்டில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார். 1954-ம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற சமயம் அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவரது நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொகுதியில் உள்ள யாரையும் பதவி விலகச் சொல்லாமல், அப்போது காலியாக இருந்த குடியாத்தம் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1957 மற்றும் 1962-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தல்களில், சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். காமராசர் அவர்கள் 1954 முதல் 1963 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராக 9 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், அக்டோபர் 1963 முதல் 1967-ம் ஆண்டு வரை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்தார். 1969 மற்றும் 1971 -ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சாதாரணத் தொண்டனாக பொது வாழ்வைத் தொடங்கி, நாட்டுப்பணியையே தனது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்து, பின்னர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரசியலில் ஒரு தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தவர் கர்மவீரர் காமராஜர். கல்வித்துறையில் ஒரு நூற்றாண்டில் ஏற்பட வேண்டிய வளர்ச்சியை முதலமைச்சர் காமராசர் ஒன்பது ஆண்டுகளில் சாதித்துக் காட்டினார். தனது ஆட்சிக் காலத்தில் பள்ளிகளின் எண்ணிக்கையை பன்மடங்காக உயர்த்தி, தமிழ்நாட்டில் கல்விப் புரட்சிக்கு வித்திட்டவர் அவர். கிராமப்புற மாணவ, மாணவிகள் கல்வியறிவு பெற, வறுமை பெரிய தடையாக இருப்பதைத் தமது அனுபவம் மூலம் பெருந்தலைவர் காமராஜர் உணர்ந்தார். மாணவர்களுக்குப் பள்ளியிலேயே, ஒருவேளை உணவு அளித்தால், அதிகமான பிள்ளைகள் கல்வி கற்க முன்வருவார்கள். அதன்மூலம், படிப்பறிவு பெறுவோரின் எண்ணிக்கையை உயர்த்தலாம். அது சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்ற எண்ணத்தில்,உதித்ததுதான் மதிய உணவுத் திட்டம். எல்லா ஏழைப் பிள்ளைகளும் இலவச கல்வியை பெற வேண்டும். அவர்கள் முன்னேற வேண்டும் என்பதில் பெருந்தலைவர் அக்கறை காட்டினார். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.