எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மேட்டூர் அணையிலிருந்து நெல்சாகுபடிக்கென ஜூலை 19-ம் தேதியிலிருந்து காவிரி டெல்டாபாசனத்திற்கு நீர் விடுவிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அனைத்து வேளாண்விரிவாக் மையங்களிலும் நீண்ட கால நெல் ரகங்கள் மற்றும் ரசாயன உரங்களை போதுமான அளவுக்கு இருப்பு வைக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
கர்நாடகத்திற்கு...
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக காவிரி டெல்டா பகுதி விளங்குவதற்குமுக்கிய ஆதாரமாக இருப்பது மேட்டூர் அணை நீர்ப்பாசனம். காவிரி நதிநீர்பிரச்சனையில், காவிரி நடுவர் மன்றம். தனது இறுதி ஆணையை 5.2.2007அன்று பிறப்பித்தது. இந்த ஆணையில் சில மாற்றங்களை செய்து உச்சநீதிமன்றம். அதன் தீர்ப்பை 16.2.2018 அன்று பிறப்பித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காவிரி நதிநீர் பிரச்சனையில் நடத்திய சட்டப்போராட்டத்தின் வழியினை பின்பற்றி, அரசு எடுத்த பலதொடர் நடவடிக்கைகளினாலும், சட்டப் போராட்டத்தினாலும்., காவிரி நீர்மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு 1.6.2018அன்று அமைக்கப்பட்டு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்தொடர்ச்சியாக, 2.7.2018 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முதல்கூட்டம் நடைபெற்று. அதில், தமிழ்நாட்டிற்கு, ஜூலை மாதத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரை முழுமையாக விடுவிக்க கர்நாடகத்திற்கு உத்தரவிடப்பட்டது.
கணிசமாக உயர்ந்து...
மேட்டூர் அணை வழக்கமாக திறக்கும் நாளான ஜூன் 12-ம் தேதி அன்றுபோதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தினால் பாசனத்திற்காக நீர் திறக்க இயலாதநிலையை கருத்தில் கொண்டு, அரசு ரூபாய் 115.67 கோடிமதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. இதன்விளைவாக டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் நீர்வரத்து கணிசமாக உயர்ந்து. இன்றைய (நேற்று) நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 89.18 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 99.372 கன அடியாகவும், அணையின் நீர்இருப்பு 51.72 டி.எம்.சி. அடியாகவும் உள்ளது.
அமைச்சர்களுடன்...
இந்த நிலையில், மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிப்பது குறித்து, நேற்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மூத்தஅமைச்சர்கள், டெல்டா மாவட்ட அமைச்சர்கள் மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகளுடன் நான் கலந்தாலோசித்தேன். மேட்டூர் அணையில் உள்ள நீர் இருப்பு, நீர் வரத்து மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைகளின்படி. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டும். இனி வரும் மாதங்களில் கர்நாடக நீர்த் தேக்கங்களிலிருந்து கிடைக்கக் கூடிய நீரினை எதிர்நோக்கியும். விவசாயிகளின் நீர்த் தேவையினையும், அவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளையும் ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து நெல்சாகுபடிக்கென இந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதியிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் விடுவிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இருப்பு வைக்க....
மேலும். இதன் மூலம், காவிரி மற்றும் காவிரி படுகையில் உள்ள ஏறக்குறைய 700 ஏரி, குளங்களில் நீர் நிரப்பப்பட்டு, அதன் வாயிலாக பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல். நிலத்தடி நீர் உயர்வடைந்து, குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்த இயலும். அத்துடன், வேளாண்மைத் துறை மூலம் சம்பா பருவத்தில் விவசாயிகள் நீண்ட கால நெல் ரகங்களை சாகுபடி செய்வதற்கேற்ற வகையில், சி.ஆர்.1009, சி.ஆர்.1009, சப்1, ஏ.டி.டி. 49, போன்றநீண்ட கால நெல் ரகங்கள், டெல்டா மாவட்டங்களின் அனைத்து வேளாண்விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும்.
ரசாயன உரங்கள்...
சம்பா சாகுபடிக்குத் தேவையான டிஏபி யூரியா, காம்ப்ளெக்ஸ் மற்றும்பொட்டாஷ் போன்ற ரசாயன உரங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவுக்கடன் சங்கங்களில் போதிய அளவு இருப்பு வைக்க வேண்டும் என நான் அறிவுறுத்தியுள்ளேன். மேலும், தற்போது அமராவதி அணையிலிருந்து விடுவிக்கப்படும் நீரினைஅனைத்து கால்வாய்கள் மற்றும் தடுப்பணைகள் வாயிலாக நீர் மேலாண்மை செய்து பாசனத்திற்கு பயன்படுத்துமாறும் நான் அறிவுறுத்தியுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ. 3,641 கோடி செலவு செய்த மோடி அரசு: ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்
20 Apr 2024புது டெல்லி, விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகி உள்ளது.
-
வாக்குச்சாவடியில் விதிமீறல் ? நடிகர் விஜய் மீது புகார்
20 Apr 2024சென்னை, வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
20 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
-
மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
20 Apr 2024சென்னை : மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.