முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுய தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி ராமநாதபுரம் கலெக்;டர் நடராஜன் வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம் -ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில்மையம் சார்பாக புதிய தொழில்முனைவோருக்காக நடைபெற்ற  நேர்முகத் தேர்வில் புதியதொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டம் மற்றும் பாரதபிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 130 நபர்களுக்கு சுய தொழில் துவங்குவதற்காக ரூ.98.61 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ.736.38 லட்சம் வங்கிக் கடன் பெறுவதற்கு பல்வேறு வங்கிகளுக்கான  பரிந்துரை ஆணைகளை கலெக்டர் முனைவர் நடராஜன் பயனாளிகளுக்கு வழங்கினார்.
 ராமநாதபுரம் கலெக்டர் இந்த கூட்டத்தில் தொழில்முனைவோரின் கல்வித் தகுதி மற்றும் தொழில்களின் சாத்தியக்கூறுகள், சந்தை வாய்ப்பு மற்றும் மேலாண்மைக் குறித்து நேர்காணலில் பரிசீலனை செய்யப்பட்டது. இத்தேர்வுக் கூட்டத்தில் மாவட்டதொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டுவரும் புதியதொழில் முனைவோர் மேம்பாட்டுதிட்டத்தின் கீழ் 4 நபர்களுக்கு நான்கு சக்கர வாகன சேவை மையம், சூரிய மின்சாரம் தயாரிப்பு போன்ற  தொழில்களுக்கு ரூ.47.72 லட்சம் தமிழக அரசு மானியத்துடன் கூடிய ரூ.587.43 லட்சம் வங்கிக் கடனாக பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 மேலும் பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 106 நபர்களுக்கு பனை ஓலையிலான பாய் மற்றும் கைவினைப்பொருட்கள் தயாரிப்பு, பனை வெல்லம் தயாரிப்பு, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதுபார்ப்பு மையம், ஆயத்த ஆடை தயாரிப்பு, உணவு மசாலா பொருட்கள் தயாரிப்பு, கட்டுமானப் பொருட்கள் வாடாகை போன்ற தொழில்களுக்கு ரூ.40.74 லட்சம் மத்திய அரசு மானியத்துடன் கூடிய ரூ.119.95 லட்சம்  வங்கிக் கடனாக பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
 மேலும் கதர் மற்றும் கிராமதொழில்கள் ஆணையம் சார்பில் 15 நபருக்கு  ஊதுபத்தி தயாரிப்பு, ஆயத்த ஆடை தயாரிப்பு,  பனைஒலைபாய் தயாரிப்பு, மெழுகுவர்த்தி தயாரிப்பு போன்ற தொழில்களுக்கு ரூ.3.15 லட்சம் மத்திய அரசு மானியத்துடன் கூடிய ரூ.9.00 லட்சம் வங்கிக் கடனாக பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கதர் மற்றும் கிராமதொழில்கள் வாரியம் சார்பில்  5 நபருக்கு கட்டுமானப் பொருட்கள் வாடாகை, உணவகம், ஆயத்த ஆடை தயாரிப்பு மற்றும் பேக்கரி பொருள் போன்ற தொழில்களுக்கு ரூ.7.00 லட்சம் மத்திய அரசு மானியத்துடன் கூடிய ரூ.20.00 லட்சம் வங்கிக் கடனாக பல்வேறு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட தொழில் முனைவோர்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் தற்காலிக ஒப்பளிப்பு பெற்றவுடன் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு உரிய சான்றிதழ் பெற்றபின் வங்கிக் கடன் பட்டுவாடா செய்யப்பட்டு பின்னர் அரசுமானியம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும்.
 இந்நேர்காணல் கூட்டத்தில் மாவட்;ட தொழில் மைய பொதுமேலாளர் ப.மாரியம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுரேஷ்பாபு, கதர் மற்றும் கிராமதொழில்கள் வாரிய உதவி இயக்குநர் பாரதி, கதர் கிராம தொழில்கள் ஆணைய அலுவலர் குமார், கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குநர் ஆர்.சியாமளநாதன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக அலுவலர் மனோகரன், தாய்கோ கிளை மேலாளர் கற்பகலிங்கம், பாண்டியன் கிராம வங்கி மேலாளர் குசேலன்; உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து