எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : டீசல் விலை உயர்வு காரணமாக பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வுக்கு பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டி வருமாறு:-
விரிவாக ஆய்வு
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள 515 புதிய பேருந்துகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வசதிகள் பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இப்பேருந்துகளை முறையாக பராமரிப்பது, போக்குவரத்துக் கழகத்தின் தொழிலாளர்கள் பிரச்னைகளை தீர்ப்பது, பேருந்து கட்டண உயர்வுக்கு பின்னர் அதிக அளவில் டீசல் விலை உயர்ந்துள்ளதால், போக்குவரத்துக் கழகங்களில் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்வது, வருவாயை பெருக்குவது, பயணத்தின் போது பயணிகள் பாதுகாப்பினை உறுதி செய்வது, கட்டண உயர்வின் காரணமாக குறைந்துள்ள பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது, போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 21 அறிவிப்புகளையும் விரைவாக செயல்படுத்துவது, விபத்தில்லா ஓட்டுநர்களை ஊக்குவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
நல்ல வரவேற்பு...
மக்கள் அதிக அளவில் பயணம் செய்கின்ற வழித்தடங்களில் புதிய விரைவு பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பயண நேரத்தை குறைப்பது, பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்வதே இதன் நோக்கம். குறிப்பாக திருவண்ணாமலை - சென்னை பயண நேரம் 1.15 நிமிடம் குறைக்கப்பட்டுள்ளது. வருவாயும் அதிகரித்துள்ளது. கரூர் - கோவை செல்ல சாதாரண பேருந்துகளில் 3.30 நிமிடமாக இருந்தது 2.30 நிமிடமாக குறைந்துள்ளது. இச்சேவை பொதுமக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. மேலும் இந்த சேவையானது பிற ஊர்களிலும் படிப்படியாக விரிவுப்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக, பொது மக்கள் தனியார் மற்றும் தமது சொந்த வாகனங்களை தவிர்த்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளை அதிகமாக பயன்படுத்திடும் நிலை உருவாகும். இதனால் இழந்துள்ள பயணிகளின் எண்ணிக்கை சரி செய்யப்படும்.
எதுவும் இல்லை...
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்., கட்டணம் உயர்த்துவது குறித்து திட்டம் எதுவும் இல்லை. நிதிச் சுமை மற்றும்தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்கள் ஆகியவற்றிற்காக கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி முதல்வரையும், துணை முதல்வரையும் நானும், போக்குவரத்து துறை செயலாளரும் சந்தித்து தெரிவித்துள்ளோம். விரைவில் ஆவண செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.
ரூ.3,685 கோடி...
பொது மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் இந்திய அளவில்இயங்கும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களும் இலாபத்தில் இயங்குவதில்லை. ஒரு சிலதனியார் பேருந்துகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயங்குவதன் மூலம் லாபம் ஈட்டுகின்றன. முற்றிலும் பொது மக்களின் சேவையை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அரசு போக்குவரத்துக் கழகங்கள் இயங்கி வருவதால் நஷ்டம் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் நஷ்டத்தை அரசு தான் வழங்குகிறது. குறிப்பாக தி.மு.க வின் 5 ஆண்டு கால ஆட்சி காலத்தில் 3,685 கோடி ரூபாய் மட்டுமே போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
ரூ.1000 கோடி...
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியிலும், இந்த ஆட்சியிலும் தமிழ்நாடு முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோரால் 7 ஆண்டுகளில் 12,580 கோடி ரூபாய் அரசால் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 60,000 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான நிலுவையில் இருந்த அனைத்து பணப்பலன்கள் ஏறத்தாழ 1500 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஊதிய உயர்வினை வழங்கி உள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் 22 லட்சம் அளவில் பயணிகள் குறைந்துள்ளனர்.
பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாகபேருந்து கட்டண உயர்வின் தாக்கமானது சில மாதங்கள் வரை நீடிக்கும், பண மதிப்பிழப்பு,ஜி.எஸ்.டி. ஆகியவற்றின் காரணமாக தொழில்களில் ஏற்பட்டுள்ள சுணக்கம் மற்றும் தனி நபர்வாகனங்கள் அதிகரிப்பு ஆகிவற்றின் காரணமாகவே இந்த குறைவு. இன்று நடைபெற்றகூட்டத்தில் பல்வேறு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளில் கடந்த மூன்று மாதகாலத்தில் வெகுவாக முன்னேற்றம் ஏற்பட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.மேலும், இந்த இழப்பினை ஈடு செய்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மின்கலன் வாகனங்கள்
போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கையில் அறிவித்துள்ளவாறு சுற்றுச் சூழலை பாதுகாக்கின்ற வகையில் பேருந்துகள் இயக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கையொப்பமிடப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில், இது போன்ற மின்கலன் வாகனங்கள் அதிக அளவில் இயங்கும். குறிப்பாக சென்னை மாநகரில் எந்தந்தவழித்தடங்களில் இது போன்ற பேருந்துகளை இயக்குவது குறித்து விரிவான கள ஆய்வுமேற்கொள்ளவிருக்கும் இக்குழுவினர் இன்னும் 10 நாட்களில் சென்னை வர உள்ளனர்.அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வாகனங்கள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும்.
200 பேருந்துகள்....
இது குறித்து நானும், செயலாளரும், மத்திய தரை வழி போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை டில்லியில் சந்தித்து 200 பேருந்துகள் வேண்டும் என்றுகோரிக்கை வைத்தோம். முதற்கட்டமாக 70 மின்கலன் பேருந்துகள் வாங்குவதற்கான கருத்துருஅனுப்பட்டுள்ளது. ஒரு பேருந்தின் விலையானது 2 கோடி அளவில் இருந்தது தற்போது 1.50கோடியாக குறைந்துள்ளது, மேலும் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக, முதல் மாநிலமாக தமிழ்நாடு தான் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலமாக 160 நகரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இது தமிழக அரசுபோக்குவரத்துக் கழகங்களுக்கு ஒரு வரபிரசாதமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.