எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,-தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர்கோவிலில் தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
இந்த விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது கூறியதாவது:-
அம்மா அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தான் நிர்வாகப்புரட்சியை ஏற்படுத்தி மக்கள் அரசை தேடி வரும் நிலையை மாற்றி, அரசு மக்களை தேடி சென்று மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளை அம்மா திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற நாளான 16.02.2017 முதல் இன்றைய தேதி வரை அம்மா திட்ட முகாம்கள் 637 நடைபெற்றுள்ளன. இம்முகாம் மூலம் மொத்தம் 24,010 மனுக்கள் பெறப்பட்டு, 11,823 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் இதர உதவித்தொகைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 11,714 பயனாளிகளுக்கு ரூ.1,17,14,000 மதிப்பிலும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 8748 பயனாளிகளுக்கு ரூ.5,64,88,570 மதிப்பிலும் உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன.
குடிமராமத்துப்பணியானது மக்களின் பங்களிப்புடன் மக்கள் திட்டமாக, மக்கள் இயக்கமாக மாற்றிய சாதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களையே சாரும். குடிமராமத்து திட்டத்தின் மூலம் அனைத்து கண்மாய்களும் தூர்வாரப்படும். மதுரை மாவட்டத்தில் முதற்கட்டமாக குடிமராமத்துப்பணிகள் 70 கண்மாய்களில் ரூ.5.29 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டன.இரண்டாம் கட்டமாக 128 பணிகளுக்காக மொத்தம் ரூ.31 கோடியே 12 இலட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட நீர்நிலைகளின் மொத்த எண்ணிக்கை 1194 இதில் வண்டல் மண் எடுக்கப்பட்ட நீர்நிலைகளின் எண்ணிக்கை 1194, அகற்றப்பட்ட மொத்த வண்டல் மண்ணின் அளவு 21,96,660 கன மீட்டர்கள், பயனடைந்த மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 16,835 ஆகும். மேலும் இலவச வீட்டு மனை பட்டாக்கள் மொத்தம் 15,268 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஜமாபந்தி 1426 பசலி ஆண்டில் 1580 மனுக்களுக்கும், ஜமாபந்தி 1427 பசலி ஆண்டில் 2650 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் வழங்கப்படும் சான்றுகள் மொத்தம் 3,93,419 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. பழங்குடியினர்களுக்கான சாதி சான்றுகள் முறையே மதுரை கோட்டத்தல் 181 பயனாளிகளுக்கும், உசிலம்பட்டி கோட்டத்தில் 40 பயனாளிகளுக்கும், மேலூர் கோட்டத்தில் 68 பயனாளிகளுக்கும் என மொத்தம் 289 சாதிச்சான்றுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வருவாய்த்துறையின் சார்பில் 88 பயனாளிகளுக்கு ரூ.26,40,000 மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டாக்களும், 26 பயனாளிகளுக்கு உட்பிரிவு செய்யப்பட்ட பட்டா மாறுதல்களுக்கான ஆணைகளும், 68 பயனாளிகளுக்கு முழுப்புலம் பட்டா மாறுதலுக்கான ஆணைகளும், 10 விவசாயிகளுக்கு வண்டல் மண் அள்ள அனுமதி வழங்குவதற்கான ஆணைகளும், 6 நபர்களுக்கு பிறப்புச்சான்றுகளும், 85 விவசாயிகளுக்கு சிறு, குறு விவசாயி சான்றுகளும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 21 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 11 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 2 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், முதலமைச்சர் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.12,500க்கான காசோலையும், ஒரு பயனாளிக்கு முதிர்கன்னி உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 11 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும், 2 பயனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை ரூ.6500க்கான காசோலையும். 3 பயனாளிகளுக்கு விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் ஓய்வூதியம், மகப்பேறு உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் விபத்து மரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 100 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.8,20,000 மதிப்பிலான காசோலைகளும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.14 இலட்சம் மதிப்பில் முதலமைச்சரின் சூரியமின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 15 பயனாளிகளுக்கு ரூ.4800 மதிப்பில் வேளாண்மை இடுபொருட்களும், கால்நடைபராமரிப்புத்துறையின் சார்பில் ரூ.12,90,000 மதிப்பில் கால்நடை காப்பீட்டுத் திட்டம் 43 பயனாளிகளுக்கும் என மொத்தம் 501 பயனாளிகளுக்கு ரூ.62,25,800 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.பெரியபுள்ளான் (எ) செல்வம் (மேலூர்) அவர்கள், எஸ்.எஸ்.சரவணன் (மதுரை தெற்கு) அவர்கள், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் சிவகாமி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் ஆர்.ராஜசேகரன், வட்டாட்சியர்கள் சோமசுந்தரசீனிவாசன் (மதுரை கிழக்கு), சரவணன் (மேலூர்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.