முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகள் நடவடிக்கையை பெற்றோர் கூர்ந்து கவனிக்க வேண்டும்: நடிகர் விவேக்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : குழந்தைகள் நடவடிக்கையை பெற்றோர்கள்தான் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று அயானவரம் சிறுமி சம்பவம் குறித்து நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஷிவாங்கி. இவரது 11 வயது மகள் (மாற்றுத்திறனாளி). 7-ம் வகுப்பு படித்து வரும் அச்சிறுமியை கடந்த 7 மாதமாக அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பணிபுரிந்து வரும் பாதுகாவலர்கள், லிப்ட் ஆபரேட்டர்கள், பிளம்பர், எலக்ட்ரீஷியன் உள்ளிட்டோர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

குடியிருப்பில் விசாரணை நடத்திய போலீஸார் சிறுமி அடையாளம் காட்டிய 18 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து கைது விசாரணை நடந்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்தச் சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் "சமூக வலைத்தளத்தில் சிதறிக்கிடக்கும் ஆபாசங்களுக்கு தணிக்கை இல்லை. இனி பெற்றோர்தான் குழந்தைகளின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். குறிப்பாகப் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு மிக அவசியம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து