முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு: ப. சிதம்பரம் மீது துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சி.பி.ஐ. துணை குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

2006-ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.இந்த முதலீடுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது ஏற்கனவே சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செ்யதுள்ளது. இந்த நிலையில் விடுபட்ட சில தகவல்கள், ஆதாரங்களை இணைத்து சி.பி.ஐ. நேற்று பாட்டியாலா நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து