முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சத்தீஸ்கரில் 7 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

சத்தீஸ்கர் : சத்தீஸ்ரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மாவோயிட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலம், தான்டேவாடா மாவட்டம், பிஜாப்பூர் எல்லைப் பகுதியான டைம்னார் வனப்பகுதியில் நேற்று காலை பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 7 மாவோயிட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 7 பேரில் 3 பெண்கள் மற்றும் 4 ஆண்கள் ஆகியோரது உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் அவர்களிடமிருந்து 2 ஐ.என்.எஸ்.ஏ.எஸ். ரக  துப்பாக்கிகள், இரண்டு 303 ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு 12 துளை துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து