முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனடாவில் இந்தியர் சுட்டுக் கொலை

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

கனடா: கனடாவின் பிராம்ப்டன் நகரில் வசித்து வந்த இந்தியரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்றனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது:-

கனடாவில் கடந்த 2009-ம் ஆண்டு பல்வீந்தர் சிங் குடியேறினார். லாரி ஓட்டுநராக அவர் இருந்து வந்தார். பிராம்ப்டன் நகரில் அவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் 4 பேர் புகுந்து அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அவர்களில் 2 பேர் தாமாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தனர். தலைமறைவாகியுள்ள மேலும் 2 பேரை தேடி வருகிறோம். கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

அவரது நண்பர் முகநூலில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில தினங்களுக்கு முன்புதான் பல்வீந்தர் சிங்குக்கு பிறந்த நாள் வந்தது. அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். அவர் உயிருடன் இல்லை என்பதை எண்ணி வருந்துகிறேன். என்ன காரணத்துக்காக அவர் கொல்லப்பட்டார் என்று தெரியவில்லை. அவரது இழப்பு மிகவும் வேதனை அளிக்கிறது என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து