முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குப்பையினை சாலையில் கொட்டிய கடைகளுக்கு ரூ.2000 அபராதம் ஆணையாளர் அனீஷ் சேகர் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 20 ஜூலை 2018      மதுரை
Image Unavailable

 மதுரை,-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 உட்பட்ட பகுதிகளில் ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்.   திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.4 கிருஷ்ணராயர் தெப்பக்குளம் தெருவில் உள்ள சாலையோர கடைகளில் மாநகராட்சியின் அனுமதி உரிமம் குறித்தும், மாநகராட்சிக்கு வரி கட்டிய இரசீது குறித்தும் ஆணையாளர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது இரண்டு கடைகளில் குப்பை கூடை வைக்காமல் சாலையோரத்தில் குப்பைகளை கொட்டிய இரண்டு கடைகளுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.2000 அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.4 அலுவலகம் அருகில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் மேற்கௌ;ளப்பட்டுள்ள மராமத்து பணிகளையும், வெள்ளைக்கல்லில் உள்ள கழிவுநீரேற்று நிலையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியினையும், கழிவுநீரேற்று நிலையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர்  .சேகர், மக்கள் தொடர்பு அலுவலர்  .சித்திரவேல், உதவி செயற்பொறியாளர் (தெருவிளக்கு)  .செந்தில், சுகாதார அலுவலர்  .ராஜ்கண்ணன் உட்பட உதவிப் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து