எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருமங்கலம்.- அ.தி.மு.க அம்மா பேரவையின் சார்பில் நடைபெற்று வரும் அ.தி.மு.க அரசின் ஓராண்டு சாதனை விளக்க பிரச்சார சைக்கிள் பேரணிக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி செக்காணூரணி அருகேயுள்ள அ.கொக்குளத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் அங்கு நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் கழக அம்மா பேரவை மாநில செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசின் ஓராண்டு சாதனைகளை மக்கள் மத்தியில் விளக்கமாக சொல்லிடும் வகையிலும்,வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு அச்சாரமிடும் வகையிலும் கழக அம்மா பேரவை சார்பில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரும் கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் 1000க்கும் மேற்பட்ட பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றுள்ள மாபெரும் சைக்கிள் பேரணி முதல்கட்டமாக மதுரை மாவட்டத்தில் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.இதனிடையே நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் தொகுதி செக்காணூரணி அருகேயுள்ள அ.கொக்குளத்திற்கு வருகை புரிந்த சாதனை விளக்க சைக்கிள் பேரணிக்கு பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.பின்னர் சைக்கிள் பேரணிக்கு தலைமையேற்று வந்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திருமங்கலம் ஒன்றிய கழகத்தின் சார்பில் தாரை தப்பட்டை முழுங்கிட பட்டாசுகளை வெடித்து எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து செக்காணூரணி அ.கொக்குளம் மந்தை திடலில் அம்மா அரசின் ஓராண்டு சாதனை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. பல்லாயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த சாதனை விளக்க சைக்கிள் பேரணி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கழக அம்மா பேரவை செயலாளரும்,தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு திருமங்கலம் ஒன்றிய பகுதியைச் சேர்ந்த பயனாளிகள் 300க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: அம்மா ஆட்சியில் இருந்தபோது மாணவ செல்வங்களுக்கு தேவையான 14 வகைளான கல்வி திட்டங்களை தந்தார்கள்.விவசாயிகளுக்கு உழவர் பாதுகாப்பு திட்டம் தந்தார்கள்.முதியோர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் திட்டம் தந்தார்;கள்.தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் செயல்படுத்தினார்கள்.ஆனால் அம்மா நம்மை விட்டுச் சென்றதற்கு பின்னாலே அம்மாவின் புனித அரசை வழிநடத்துகிற முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்கள் அம்மாவின் கனவு திட்டங்களை மக்களுக்கு வாரி வழங்கி வருகிறார்கள்.17 மாதங்களில் எத்தனை போராட்டங்கள் வந்தாலும் அத்தனையும் சமாளித்து முதல்வரும்,துணை முதல்வரும் இதிகாச சகோதரர்களாக நமக்காக இரவு பகலும் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இத்தகைய அம்மா அரசின் சாதனைகளை ஆடிக்காற்றை எதிர்கொண்டு 1000 இளைஞர்கள் பங்கேற்றிடும் சைக்கிள் பேரணியின் மூலம் தாய்மார்களுக்கு எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.17 மாதங்களில் கிடைக்காத காவிரியை கொண்டு வந்திட காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டு விட்டது.ஆனால் அண்டை மாநிலமாக உள்ள கர்நாடகம் முரண்டு பிடித்தபோது இயற்கை அன்னை நமது காவிரியை மீட்டெடுத்து தற்போது நமது முதல்வர் மேட்டூர் அணையை திறந்து வைத்து துள்ளிக் குதித்து வரும் காவிரியை மீட்டெடுத்த இரண்டாம் கரிகால் சோழனாக நமது முதல்வர் திகழ்கிறார்.அம்மாவின் கருணையால் திருமங்கலம் அருகேயுள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்திட நடவடிக்கை மேற்கொண்டு அதில் வெற்றி பெற்றுள்ளோம்.மேலும் குடிமராமத்து திட்டம்,வண்டல் மண் வழங்கிடும் திட்டம் என ஆயிரமாயிரம் திட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.
தற்போது எந்த கோப்பும் கோட்டையில் தூங்குவது கிடையாது.நமது முதல்வர் கோப்புகளுக்கு உடனடியாக உயிர் கொடுக்கிறார்.நலத்திட்டங்களை உடனடியாக தொடங்கி வைக்கிறார்.புதிய திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டுகிறார்.மேலும் முடிவடைந்த திட்;டங்களை நேரில் சென்று தொடங்கி வைக்கிறார்.இது அம்மா கொடுத்த பயிற்சியால் சாத்தியமாகிறது.இதன் மூலம் இன்னும் 100ஆண்டுகள் மட்டுமல்ல இன்னும் 1000ஆண்டுகள் அம்மாவின் ஆட்சி நீடித்து நிலைத்திருந்து மக்கள் சேவையாற்றும் என்பதற்கு இங்கு கூடியிருக்கும் தாய்மார்களின் கூட்டமே சாட்சி.யார் கைவிட்டாலும் யார் காப்பாற்றா விட்டாலும் அம்மாவின் அரசை இங்கு கூடியுள்ள புறநானூற்று தாய்மார்கள் கூட்டம் நிச்சயமாக காவல் தெய்வங்களாக இருந்து காப்பாற்றிடும்.இன்றைக்கு 4ஆயிரம் கோடி ரூபாய் சியெட் தொழிற்சாலை,1500கோடி ரூபாய் எய்ம்ஸ் மருத்துவமனை,328 கோடி ரூபாயில் குடி மராமத்து பணிகள்,நிலத்தை பயன்படுத்திட வண்டல் மண் அள்ளிட அரசு அனுமதி என அம்மாவின் அரசு பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது என்று பேசினார்.இதை தொடர்ந்து சைக்கிள் பேரணியில் பங்கேற்றுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தலைசிறந்த பேராசிரியர்களை கொண்டு திறன் மேம்பாடு பயிற்சி மற்றும் ஆளுமைத் திறன் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.சரவணன் எம்.எல்.ஏ.,கழக அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், சதன்பிரபாகர்,மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன்,சார்பு அணி நிர்வாகிகள் ஓம்கேசந்திரன்,தமிழ்ச்செல்வம்,திருப்பதி, ஒன்றிய செயலாளர்கள் வக்கீல்.அன்பழகன், மகாலிங்கம்,ராம்சாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,கட்சி நிர்வாகிகள் கபிகாசிமாயன், பாவடியான்,கண்ணன்,அன்னகொடி, சுகுமார்,சுமதிசாமிநாதன், பழனிச்சாமி,மாணிக்கம், சாமிநாதன்,முத்துராஜா, வெங்கடேஸ்வரன் மற்றும் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் முருகேசன்,தாசில்தார் நாகரத்தினம்,மதுரை மாவட்ட பி.ஆர்.ஓ.தங்கவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க