Idhayam Matrimony

இணைய பயன்பாட்டிற்காக தனி சாட்டிலைட்: பேஸ்புக் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: பேஸ்புக் நிறுவனம் முதல்முறையாக இணைய பயன்பாட்டிற்காக சுயமாக செயற்கைகோள் ஒன்றை அனுப்ப உள்ளது. இதற்கு அதீனா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் தற்போது உலகம் மொத்தத்தையும் இணையம் மூலம் எளிதாக இணைக்க வழி பார்த்துக் கொண்டு இருக்கிறது. இதற்காக ஏற்கனவே அகுலா என்று பறக்கும் பலூன் மூலம் இணையத்தை சில ஆப்ரிக்க கிராமங்களுக்கு வழங்கியது. இப்போது நேரடியாக சாட்டிலைட் அனுப்ப முடிவெடுத்துள்ளது. இது முழுக்க முழுக்க இணைய சேவை பயன்பாட்டிற்காக மட்டுமே அனுப்பப்பட உள்ளது. உலகம் முழுக்க எல்லா நாட்டு மக்களும் இந்த சாட்டிலைட் மூலம் இணையத்தை பயன்படுத்தும் வகையில் இதை உருவாக்க இருக்கிறது.

இதன் மூலம் எல்லோரும் பேஸ்புக்கை எளிதாக பயன்படுத்த முடியும். அது மட்டுமில்லாமல் மற்ற இணைய சேவையை பயன்படுத்தவும் இந்த சாட்டிலைட் உதவியாக இருக்கும். உலகம் முழுக்க எளிதாக இணையம் மூலம் இணைப்பதே குறிக்கோள் என்று மார்க் ஜூக்கர்பெர்க் கூறியுள்ளனர். அடுத்த வருடம் மார்ச் மாதம் இந்த சாட்டிலைட் அனுப்பப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து