முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் ஆழியாளம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேலின் மகன் மாதேஸ் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார். காட்டு யானை தாக்கி உயிரிழந்த மாதேஸின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் வனத்துறை மூலம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஆழியாளம் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைவேலின் மகன் மாதேஸ் என்பவர் 22.07.2018 அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு செல்லும் போது, எதிர்பாராதவிதமாக காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் வேதனை அடைந்தேன்.

காட்டுயானை தாக்கியதில் உயிரிழந்த மாதேஸ் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த மாதேஸ் குடும்பத்திற்கு நான்கு  லட்சம் ரூபாய் வனத் துறை மூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து