முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அஸ்வின், குல்தீப் இடம்பெற வேண்டும் இந்திய அணிக்கு அசாருதீன் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின், குல்தீப் யாதவ் இருவரும் இந்திய அணியில் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அப்போதுதான் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி விளையாடி வருகிறது. டி20 தொடரைக் கைப்பற்றிய இந்திய அணி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. இதில் இந்திய அணியில் டெஸ்ட் தொடரில் விளையாடும் 11 வீரர்களில் குல்தீப் யாதவ், அஸ்வின் ஆகியோர் இடம் பெற வேண்டும் என்று முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து முகமது அசாருதீன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் அளவுக்கு வலிமையான அணியாக இருக்கிறது, சிறந்த வாய்ப்புகளும் உள்ளன. இங்கிலாந்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு அவர்களிடம் பந்துவீச்சு இல்லை. இங்கிலாந்துடன் விளையாடும் இந்திய அணியின் 11 வீரர்களில் கண்டிப்பாக அஸ்வின், குல்தீப் யாதவ் இடம் பெற வேண்டும். விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். 3 வேகப்பந்துவீச்சாளர்கள்,2 சுழற்பந்துவீச்சாளர்கள் என்ற கலவையில் இருக்க வேண்டும்.

இங்கிலாந்தில் ஒருவேளை ஆடுகளம் பசுமையாக இருந்தால், 4 வேகப்பந்துவீச்சாளர்கள் ஒரு சுழற்பந்துவீச்சாளர்கள் களமிறங்க வேண்டும். ஆனால்,என்னைப்பொருத்தவரை 3 வேகப்பந்து வீச்சாளர்கள், 2 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதுதான் சரியானதாகும்.

ஏனென்றால், நாம் விளையாடும் காலத்தில் இங்கிலாந்தில் வெயில் காலமாகும். அப்போது ஆடுகளம் காய்ந்து, வறண்டு காட்சியளிக்கும். ஆதலால் போட்டியின் கடைசி இரு நாட்கள், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகக் களம் மாறி விடும்.

இங்கிலாந்து அணி வெற்றி பெற இருக்கும் ஒரே வாய்ப்பு ஆடுகளம் பசுமையாக இருந்தால் மட்டுமே வேகப்பந்துவீச்சால் வெல்ல முடியும். ஆடுகளத்தைப் பசுமையாக வைத்திருந்தால், அவர்களுக்கும் சிக்கல் ஏற்படும். ஏனென்றால், நம்மிடமும் திறமையான ஸ்விங் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.

இப்போது குல்தீப்யாதவ் நல்ல பார்மில் இருப்பதால், அவரை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அஸ்வினுக்கும் கண்டிப்பாக வாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அசாருதீன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து