முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 ஆண்டுகளுக்குப் பின் 39-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது - மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று கண்டுகளிப்பு

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சேலம் : 5 ஆண்டுகளுக்குப் பிறகு 39-வது முறையாக மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி நிரம்பி உள்ளது. இதனால் காவிரி டெல்டா மாவட்ட மக்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நிரம்பி வழியும் மேட்டூர் அணையை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து ரசித்து வருகிறார்கள்.

கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டிய கனமழையால் அங்குள்ள நீர் நிலைகள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பியுள்ளன. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்தால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்தது.

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 81,038 கன அடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 51,038 கனஅடியும், கபினி அணையில் இருந்து 30,000 கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. மேட்டூர் அணை தனது வரலாற்றில் முழுகொள்ளளவை எட்டி நிரம்புவது இது 39-வது முறையாகும். அணை நிரம்பியதால் சிறப்பு 16 கண் மதகு பகுதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. 16 கண் மதகு வழியாக உபரி நீரும் திறக்கப்பட்டது. நேற்று காலையில் பாசனத்திற்காக 30,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், 12 மணிக்கு பிறகு 30,000 கனஅடியில் இருந்து 40,000 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேட்டூர் அணை நிரம்பியுள்ளதால் காவிரி டெல்டா மக்கள் மட்டுமின்றி தமிழக மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிரம்பி வழியும் மேட்டூர் அணையை மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை மக்கள் கண்டு ரசித்தனர். சிலர் கரையோரங்களில் நின்றும் செல்பி எடுத்தும் மகிழ்கின்றனர்.  மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும், அணைக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, திருச்சி, சேலம், கரூர், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு 12 மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து