முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 பேர் தற்கொலை செய்த சம்பவம்: வளர்க்கப்பட்டு வந்த நாயும் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : டெல்லியில் புராரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவர்களின் வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த நாயும் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தது.

டெல்லியின் வடக்குப் பகுதியில் சாந்த் நகர் புராரி பகுதியைச் சேர்ந்தவர் பவனேஷ். அவரின் சகோதரர் லலித் பாட்டியா. இருவரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்குப் போட்டு இறந்திருந்தனர்.

லலித் பாட்டியா குடும்பத்தினர் இந்தியன் பிட்புல் வகை கலப்பின நாயை வளர்த்து வந்தனர். இந்தக் குடும்பத்தினர் தற்கொலைக்குப் பின் நாயை மீட்ட விலங்குகள் நல உரிமையாளர்கள் நொய்டாவில் உள்ள பண்ணையில் வளர்த்து வந்தனர். தொடக்கத்தில் சாப்பிடாமல் முரண்டு பிடித்த இந்த நாய் அடுத்த சிலநாட்களில் அங்குள்ள ஊழியர்களிடம் நன்றாகப் பழகியது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலையில் நடைப்பயிற்சிக்கு நாயை அழைத்து சென்றபோது நாய் மாரடைப்பால் உயிரிழந்ததுள்ளதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து