எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலைத் துறையின் சாலை பராமரிப்புப் பணிகள் குறித்து உண்மைக்கு புறம்பான செய்தி வெளியிட்டதற்கு அமைச்சர் ஜெயகுமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
2012-2013-ல் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டம், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம் மற்றும் திருவள்ளூர் நெடுஞ்சாலைத்துறை கோட்டங்களில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் மாவட்ட முக்கிய சாலைகளை அனுபவமும், தொழில் நுட்ப ஆற்றலும் உள்ள ஒப்பந்தகாரர்கள் மூலம் 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து பராமரிக்கும் (பர்பார்மன்ஸ் பேஸ்டு மெயின்டன்ஸ் கான்ட்ராக்ட் )என்ற செயல்பாட்டுஅடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என்ற நடைமுறை உலக வங்கியின் வழிகாட்டுதலின்படி நடைபெற்று வருகிறது. இத்திட்டம் விருதுநகர் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்திலும் இவ்வாண்டு செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நடைமுறையின்படி, ஒப்பந்தபுள்ளி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஒப்பந்தக்காரர் ஐந்து ஆண்டு காலத்திற்கு சாலைகளை அடிப்படை சீரமைத்தல், காலமுறை பழுது பார்த்தல், சிறு அளவிலான மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளுதல், அவசர கால சீரமைப்புப பணிகளை மேற்கொள்ளுதல், வழக்கமான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளுதல், சாலைகளை அகலப்படுத்துதல், உறுதிபடுத்துதல், சிறுபாலங்கள் கட்டுதல், பாலங்களை தேவைக்கேற்ப அகலப்படுத்துதல், தடுப்புச் சுவர்களை அமைத்தல், மழைநீர் வடிகால் அமைத்தல், போன்ற பணிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
மேற்குறிப்பிட்ட பணிகளை மட்டும் அல்லாமல், ஐந்து ஆண்டுகளுக்கு சாலை பாதுகாப்பு பணிகளான கிலோ மீட்டர் கற்கள் அமைத்தல், எல்லை கற்கள் அமைத்தல், விபத்துக்களை தவிர்க்க இரும்பு தடுப்புகள் அமைத்தல், உயர்மட்ட பெயர் மற்றும் வழிகாட்டு பலகைகளை அமைத்தல், சாலைகளின் மையத்திலும், ஓரங்களிலும் ஒளிரும் குறியிடுகள் அமைத்தல், சாலை ஓரப் புதர்களை அகற்றுதல், தாழ்வான சாலை ஓரங்களை சீர்செய்தல், சாலைகளின் மையத் தடுப்பாண்களில் சேரும் மண்ணை அகற்றுதல், பாலங்களின் கீழ் தண்ணீர் செல்லும் பகுதிகளில் புதர்கள் மற்றும் வண்டல் மண்ணை அகற்றுதல், சாலை அமைத்த இடங்களில் கருப்பு வெள்ளை வர்ணம் பூசுதல், சாலைகளில் ஏற்படும் மேடுபள்ளங்களை சீர்செய்தல் ஆகிய பல்வேறு பணிகளையும் ஒப்பந்தகாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ச்சியாக செய்திட வேண்டும். மழைக் காலங்களில் ஏற்படும் அனைத்து வகையான அவசர சாலைப் பணிகளையும் உடனுக்குடன் ஒப்பந்தகாரர் மேற்கொள்ள வேண்டும் என்பதும் இந்த பராமரிப்பு ஒப்பந்தத்தின் இன்றியமையாத அம்சமாகும். இவ்வகையான ஒப்பந்தங்கள் மூலம் சாலைகள் பராமரிக்கப்படுவதால் சாலைகள் செம்மையாகவும், உடனுக்குடன் பழுது நீக்கப்பட்டு, செப்பனிடப்படுகின்றன என்பதைக் கண்டறிந்து மத்திய அரசு இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தவதற்கு தேவையான உதவிகள் செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. இந்த நடைமுறை செயல்திறன் சிறப்பாக உள்ளதென உலக வங்கி மதிப்பீட்டிருப்பதுடன், பல நாடுகளில் இது நடைமுறையில் இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த திட்டத்தில் பெருமளவு நிதி முறைகேடு நடந்திருப்பதாக நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். இச்செய்தியில் 8 கி.மீ. நீள சாலையை இரண்டு சாலைப் பணியாளர்கள் வீதம் 43 சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அதன் மூலம் ஐந்து ஆண்டுகள் பராமரிப்பு பணி மேற்கொண்டாலும், ரூபாய் 10 கோடி செலவில் சாலைகளை பராமரிக்க முடியும். ஒரு கோட்டத்திற்கு ரூபாய் 100 கோடி செலவு செய்தாலும் மொத்தம் 5 கோட்டத்திற்கு ரூபாய் 500 கோடி மட்டுமே தேவைப்படுகிறது. ஆனால் ரூபாய் 2083 கோடி வரை தனியார் ஒப்பந்த நிறுவனத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நடைமுறைக்கு பொருந்தாத ஒரு கற்பனை குற்றச்சாட்டு அச்செய்திதாளில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண பராமரிப்புப் பணிகளுக்கான தொழிலாளர் ஊதியத்திற்கான மதிப்பீட்டை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்துடன் ஒப்பீடு செய்து, கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அபாண்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பது சாலை பராமரிப்பில் தொடர்புடைய ஒப்பந்தத்தில் அடங்கியிருக்கும் ஏராளமான பணிகளை கருத்தில் கொள்ளாமல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பாக நிதி முறைகேடு என தவறான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதாரணத்திற்கு, பொள்ளாச்சி கோட்டத்தில் முதல் நில சீரமைத்தலில் 153 கி.மீ நீளச்சாலை ரூபாய் 104 கோடியிலும், முதலாண்ட காலமுறை புதுப்பித்தலில் 28 கி.மீ. நீளச் சாலை ரூபாய் 12.24 கோடியிலும், இரண்டாமாண்டு காலமுறை புதுப்பித்தலில் 55.30 கி.மீ. நீளச்சாலை ரூபாய் 24.40 கோடியிலும், மூன்றாமாண்டு காலமுறை புதுப்பித்தலில் 141 கி.மீ. நீளச்சாலை ரூபாய் 68.89 கோடியிலும் என ரூ.204 கோடி மதிப்பிலான சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் சாலைப் பாதுகாப்பு பணிகள் ரூபாய் 13.89 கோடி மதிப்பிலும், பராமரிப்பு பணிகள் ரூபாய் 33.61 கோடி தொகையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து பணிகளையும் உள்ளடக்கி செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்தத்திற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யப்படுகிறது. இவ்வாறு இருக்கையில், செய்தித்தாளில் சாதாரண பராமரிப்பு பணிக்கான மனிதவளக்கூற மதிப்பீட்டை மட்டும் சுட்டிக்காட்டி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டதாக தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பொள்ளாச்சி கோட்டத்தில் 377 கி.மீ. சாலைகளை பராமரிக்க 8 கி.மீ. நீளமுள்ள சாலைக்கு 2 பேர் வீதம், 94 சாலைப் பணியாளர்களும், 25 கி.மீ. சாலைக்கு ஒருவர் வீதம், 15 சாலை ஆய்வாளர்களும் பணியமர்த்தப்பட வேண்டும். மேற்காணும், 109 பணியாளர்களுக்கு சராசரியாக மாத ஊதியம ரூபாய் 32,000/- வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 20.93 கோடி வழங்கப்பட வேண்டும். மேலும், சாலை பராமரிப்பிற்கான சாலையின் இருபுறமும் மண் வடிகால் அமைத்தல், சாலை மையத் தடுப்பாண்களில் கருப்பு, வெள்ள வர்ணம் பூசுதல் மற்றும் சாலையில் ஏற்படும் நொடிகள் மற்றும் பள்ளங்களை சீர் செய்வதற்காக பயன்படுத்தப்படும் தார், ஜல்லி போன்ற பொருட்களின் விலை மற்றும் கருவி தளவாடங்கள் மற்றும் வாகனங்களின் வாடகைக்கான தொகை வருடத்திற்கு சராசரியாக ரூபாய் 6.00 கோடி வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூபாய் 30.00 கோடி ஆகும், மொத்தம் ரூபாய் 50.93 கோடி செலவாகும். இதில் பொள்ளாச்சி கோட்டத்தை பொறுத்தவரை ரூபாய் 36.46 கோடி மட்டும் ஒப்பந்ததாரருக்கு வழங்க வழிவகை உள்ளதால் அரசுக்கு, ரூபாய் 16.47 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, பொள்ளாச்சி கோட்டத்தின் சாலைகளை செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டத்தின் மூலம் பணி மேற்கொள்ளாமல், தனித் தனியாக திட்டப் பணிகள் மூலம் 377 கி.மீ. நீள சாலைகள மேம்படுத்தியிருந்தால் 278 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டிருக்கும். எனவே, ரூபாய் 55.46 கோடி அரசுக்கு சேமிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டம் பொள்ளாச்சி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் விருதுநகர் கோட்டங்களில் செயல்படுத்துவதால் அரசுக்கு ரூ 527.73 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. சாலைகளை செம்மையாக பரரமரிக்கவும், உடனுக்குடன் பழுது நீக்கவும், மழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகளை களையவும், செப்பனிடவும் அறிமுகம் செய்யப்பட்டு, அடிப்படையிலான பராமரிப்பு ஒப்பந்த முறையினால் அரசுக்கு நிதி சேமிப்பு உண்டாகிறது என்றும், நிதி இழப்பும், எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. செயல்பாட்டு அடிப்படையிலான பராமரிப்பு திட்டத்தின் முறையில் செயல்படுத்தப்படும் ஒப்பந்த முறை குறித்து அந்த செய்தித் தாளில் 22-ம் தேதி வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.