முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னருடன் ஸ்டாலின் சந்தித்தது விளம்பரத்திற்காக: கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

திங்கட்கிழமை, 23 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஊடகங்களில் தன்னை பற்றி செய்திகள் வெளியாக வேண்டும் என்பதற்காகவே ஸ்டாலின் கவர்னரை சந்தித்து பேசியுள்ளார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

சிறப்பான ஆட்சி...

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பண்ணை பசுமைக்கடைகளில் ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், அவர் கட்சியின் தலைவரை உயர்வாக பேசுவதில் தவறு ஏதும் இல்லை. மு.க.ஸ்டாலினை செயல் தலைவர், அடுத்த முதல்வர் என கூறுவது அவர்கள் கட்சியின் நிலைப்பாடு. அ.தி.மு.க.வை பொறுத்தவரை ஜெயலலிதாவின் ஆட்சி தான். மீண்டும் நாங்கள் ஆட்சிக்கு வருவோம் . முதல்வர் சிறப்பான ஆட்சியை கொடுத்து வருகிறார்.

ஊடகங்களில்...

3 நாட்களாக நடைபெறும் லாரி ஸ்டிரைக் தொடர்பாக உடனடியாக எங்களை அழைத்து மக்கள் சிரமப்பட கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார். மக்களின் பிரச்சனையை தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளார். உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் முதல்வர் ஆட்சி சிறப்பான ஆட்சி. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் எதுவும் செய்யாமல் இருந்தால் தான் ஆச்சரியம். அவர் லண்டன் போய் விட்டு வந்தார். அவர் ஊடகங்களில் தெரிய வேண்டும் என்பதற்காக கவர்னரை சந்தித்துள்ளார். இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து