முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரயில்வே ஓட்டல் ஊழல் வழக்கு: லல்லு குடும்பத்திற்கு கோர்ட் சம்மன்

திங்கட்கிழமை, 30 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லல்லு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் இவ்வழக்கில் குற்றஞ்சாட்ட சிலருக்கும் டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இவர்கள் அனைவரும் ஆகஸ்ட் 31-க்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.  சி.பி.ஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிகையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மனை அனுப்பியுள்ளது.

கடந்த 2004 முதல் 2009 வரை லல்லு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது, ராஞ்சி மற்றும் பூரி ஆகிய இடங்களில் ஐ.ஆர்.சி.டி.சி ஓட்டல்களைப் பராமரிப்பதற்காக ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை அனுமதித்ததில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இந்திய ரயில்வேயின் இரு ஓட்டல்களை பராமரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றை மேற்கொள்ள சுஜாதா ஓட்டல் எனும் தனியார் லிமிட்டெட் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டதன் பின்னணியில் மிகப்பெரிய ஊழல் பரிமாற்றப்படுவதற்கான சதி திட்டம் தீட்டியதாக இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து