முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடிமக்கள் பதிவேடு விவகாரம்: மம்தா மீது பா.ஜ.க. புகார்

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.க. இளைஞர் அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் நடந்த ஒரு மாநாட்டில் பேசுகையில்,

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு அரசியல் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டைத் துண்டாடும் முயற்சியில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. இந்தச் செயலை தாங்கிக் கொள்ள முடியாது. இதே செயலை தொடர்ந்து செய்தால் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடிக்கும். ரத்தக்களறியாகும் என்று பேசி இருந்தார். மம்தாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பா.ஜ.க.வின் யுவமோர்ச்சா அமைப்பினர் அசாமில் உள்ள நாகர்காட்டியா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து