முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நஜ்மா ஹெப்துல்லா, குலாம் நபி ஆசாத் உட்பட 5 பேருக்கு சிறந்த எம்.பி.க்கள் விருது - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நஜ்மா ஹெப்துல்லா, குலாம்நபி ஆசாத் உட்பட 5 பேருக்கு சிறந்த எம்.பி.க்கள் விருதை டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

டெல்லி நாடாளுமன்றக் கட்டடத்தில் அமைந்துள்ள மைய மண்டபத்தில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சிறந்த எம்.பி.க்களாக 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 5 தலைவர்களை, இந்திய நாடாளுமன்றக் குழு விருதுக்கு தேர்வு செய்திருந்தது. மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், மணிப்பூர் மாநில கவர்னருமான டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை எம்.பி.க்கள் தினேஷ் திரிவேதி, பார்த்ருஹரி மஹ்தாப், ஹுக்கும் தேவ் நாராயண் தேவ் ஆகியோர் விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் 5 பேருக்கும் விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்தார். விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து