முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருதுநகர் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018 ரதத்தை கலெக்டர் சிவஞானம் தொடங்கிவைத்தார்

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்,- விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் அலுவலக வளாகத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018 (ஸ்வச் சர்வேக்ஷன் கிராமின் 2018) விழிப்புணர்வு ரதத்தை  மாவட்ட ஆட்சித்தலைவர்  .அ.சிவஞானம் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும்பொழுது தெரிவித்ததாவது:-
மத்திய அரசின் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம், கிராமங்களில் தற்போதுள்ள சுகாதாரத்தின் தரம் மற்றும் சுகாதார கட்டமைப்பில் அடைந்த முன்னேற்றத்தின் அடிப்படையில், முதன் முறையாக மத்திய அரசின் சார்பில் தனியார் முகமை ஒன்றின் மூலமாக ஆகஸ்டு 01 முதல் ஆகஸ்டு 31 வரை  தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018 (ளுறயஉhh ளுரசஎநமளாயn புசயஅin(ளுளுபு) – 2018) கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்கள் தரவரிசைபடுத்தப்படவுள்ளது.
இந்த தூய்மை கணக்கெடுப்பானது, தூய்மை பாரத இயக்கத்தின் விரிவான அளவீடுகள் அடிப்படையிலும், பொது இடங்களில் தூய்மை குறித்த கணக்கெடுப்பு, பொதுமக்களின் கருத்து அறிதல் மற்றும் தூய்மை பாரத திட்ட செயலாக்கம் போன்றவற்றின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் விரிவான மதிப்பீடு செய்யப்படும். பொது இடங்களான பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார வளாகங்கள், கிராமச் சந்தை, வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களைத் தூய்மையாக பராமரித்து ஆய்வு செய்யப்படும். மேலும் பொது மக்களிடமிருந்து கிராமத்தின் தூய்மைநிலை, கழிவறை பயன்பாடு, குப்பைகளை அகற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து கேட்கப்படும்.
இதில் சிறந்த மாவட்டம் மற்றும் மாநிலத்துக்கு அக்டோபர் 2 ஆம் தேதி தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்பட உள்ளன.  கணக்கெடுப்பின்போது கிராம ஊராட்சிகளில், சேவை அளவிலான முன்னேற்றத்திற்கு 35 சதவீதம்,  பொது இடங்களில் தூய்மை குறித்த நேரடி கள ஆய்வு மூலம் 30 சதவீதம், கிராமப் பொதுமக்களின் கருத்தின் அடிப்படையில் 35 சதவீதம்,  என்ற வகையில் திட்டச் செயலாக்கம் 100 சதவீதம் மதிப்பீடு செய்யப்பட உள்ளது.
  எனவே, விருதுநகர் மாவட்டத்தில் இக்கணக்கெடுப்பிற்கென, இலச்சினை மற்றும் தகவல் பலகை வெளியிடப்பட்டுள்ளது.  கணக்கெடுப்பு தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  தூய்மைக் கணக்கெடுப்புக் குழு கிராமங்களுக்கு வரும் நாளில் பொதுமக்கள் தங்கள் கருத்துரைகளையும், ஆலோசனைகளையும் தெரித்து தகுந்த ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனவும், தூய்மை கணக்கெடுப்பு ரதம் விருதுநகர் மாவட்டத்தில் வட்டார அளவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் செல்ல இருக்கிறது. மேலும் தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் தொடர்பான துண்டு பிரச்சுரங்கள், சுவரொட்டிகள் ஸ்டிக்கர்கள் மற்றும் பேனர்கள்  மூலம் விழிப்புணர்வு செய்யப்படவுள்ளது. மேலம் இது தொடர்பான கைபேசியில் தனியாக ஒரு தொலைபேசி செயலி எஸ்.எஸ்.ஜி (ஆழடிடைந யுpp - ளுளுபு) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இதன் வாயிலாக முக்கிய சுகாதாரம் தொடர்பான அம்சங்கள் மீது அரசாங்கத்திற்கு தங்களின் கருத்தை அளிப்பதற்கு ஒரு வாய்ப்பு இதனையும் பொது மக்கள் பயன்படுத்ததி கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் .அ.சிவஞானம் தெரிவித்தார்கள்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர்   தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018  – 2018) கணக்கெடுப்பு தொடர்பான கையேட்டினை வெளியிட மாவட்ட ஊரகவளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் திரு.சுரேஷ் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.
அதைதொடர்ந்து சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டு வில்லைகளை அரசு வாகனங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர்  ஒட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர்  சுரேஷ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர்  தெய்வேந்திரன், மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  .செந்தில்குமாரி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து