முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரவ் மோடியை நாடு கடத்த இங்கிலாந்திடம் கோரிக்கை: பார்லி.யில் வி.கே. சிங் தகவல்

வெள்ளிக்கிழமை, 3 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,  நீரவ் மோடி இந்தியாவிடம் சரணடைவதற்கு ஏற்ப அவரை நாடு கடத்த வேண்டுமென்ற கோரிக்கையை இங்கிலாந்திடம் வைக்கப்பட்டுள்ளதாக வி.கே.சிங் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த வழக்கில் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவிற்கு கொண்டு வருவது தொடர்பாக மக்களவையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இங்கிலாந்திலிருந்து நீரவ் மோடியை இந்தியாவிற்கு ஒப்படைக்க வேண்டுமென ஒரு ஒப்படைப்பு கோரிக்கை உள்துறை அமைச்சகத்திலிருந்து வெளியுறவு அமைச்சரகத்திற்கு வந்துள்ளது. இங்கிலாந்து அதிகாரிகளுக்கு இக்கோரிக்கையை முன்வைத்து ஒரு சிறப்பு ராஜதந்திரப் பணி கடிதம் மூலம் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று வி.கே.சிங் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து