எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பர்மிங்ஹாம் : எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் வந்து இந்திய அணி போராடி தோல்வி தழுவியது. 194 ரன்கள் வெற்றி இலக்கை எதிர்த்து ஆடிய இந்திய அணி 110/5 என்ற நிலையிலிருந்து 54.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. தனது 1000-வது போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.இந்தத் தோல்வி குறித்து இந்திய அணி பெரிதாக ஏமாற்றமடைய வேண்டியத் தேவையில்லை, மிக அருமையான தொடக்கமாக இந்த 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கு எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் அமைந்தது, எப்போது வேண்டுமானாலும் இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை இப்போது நம் பவுலர்களுக்கு வந்திருக்கும்.
அதேசமயம், பேட்ஸ்மென்கள் இன்னும் தங்கள் தரத்தை உயர்த்த வேண்டும், குறிப்பாக தவண், ராகுல், விஜய், ரஹானே போன்ற 4 முக்கிய வீரர்கள் இரு இன்னிங்ஸ்களிலும் சொதப்பினால் விராட் கோலி மட்டும் தனி நபராக எப்படி வெற்றி பெற முடியும்?
நேற்று இஷாந்த் சர்மாவுக்கு ஸ்ட்ரைக்கைக் கொடுத்ததோடு அவரே ரஷீத்தை தைரியமாக ஸ்வீப் ஆடியபோது ஒரு ரன் எடுத்து ஸ்ட்ரைக்கை தன் வசம் வைக்காமல் 2 ரன் ஓடி இசாந்திடம் ஸ்ட்ரைக்கைக் கொடுத்தது, சமயோசிதமற்ற மவுட்டீகமே. அதே ஓவரில் இஷாந்த் சர்மா, ரஷீத்திடம் எல்.பி.ஆகி வெளியேறினார்.
8 விக்கெட்டுகள் இருக்கும்போது இஷாந்தை ஸ்ட்ரைக்கிலிருந்து காத்து ஆடியிருக்க வேண்டும் 9 விக்கெட்டுகள் விழுந்திருக்கும் நிலையில் கரணம் தப்பினால் மரணம், 2ம் வாய்ப்பு கிடையாது எனும்போது உமேஷ் யாதவ்வை வைத்துக் கொண்டு இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது.
மேலும் இந்தமாதிரி இலக்கையெல்லாம் கொஞ்சம் அடித்து ஆட வேண்டும். அச்சமற்ற கிரிக்கெட் ஆட வேண்டும், தொடர்ந்து அந்த லெந்த்தில் அவர்களை வீச அனுமதித்திருக்கக் கூடாது, வித்தியாசமாக ஏதாவது செய்திருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
194 ரன்கள் இலக்குடன் 2-வது இன்னிங்ஸில் களமிறங்கிய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் சேர்த்திருந்தது. 84 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவைப்பட்டநிலையில் 4-வது நாள் ஆட்டத்தைக் கோலி 43 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களிலும் தொடர்ந்தனர்.
எட்ஜ்பாஸ்டன் ஆடுகளம் காலை நேரத்தில் 20 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சுக்கு நன்றாக ஒத்துழைக்கும், ஸ்விங் நன்றாக எடுக்கும் என்று கூறப்பட்டது. அதற்கு ஏற்றார்போல், ஸ்டோக்ஸ், பிராட், ஆன்டர்ஸன் பந்துவீச்சில் அனல் பறந்தது.
நினைத்தது போல ஆன்டர்ஸன் முதல் ஓவரில் மிகுந்த கட்டுக்கோப்பாக வீசினார். லைன் அன்ட் லென்த்தை விட்டு விலக்காமல் வீசியதால், தினேஷ் திணறினார்.
முதல் பந்திலிருந்து அவுட் சைடாக விலகிச் சென்ற பந்தை தொட முயன்று தயங்கி, தயங்கி விளையாடிய தினேஷ் கார்த்திக், கடைசி பந்தை தொட முற்பட்டு, பந்து பேட்டை முத்தமிட்டு கீப்பரின் கையில் தஞ்சமடைந்தது. 20 ரன்களில் தினேஷ் கார்த்திக் வெளியேறினார்.
அடுத்து வந்த ஹர்திக் பாண்டியாவும், கோலியும் நிதானமாக ஆடினார். இங்கிலாந்து வீரர்களின் கவனம் முழுவதும் கோலி மீதே இருந்தது. எப்படியாவது கோலியை ஆட்டமிழக்கச் செய்ய நெருக்கமாகப் பந்துவீசினார்கள். இருமுறை கோலிக்கு எல்பிடபியுள் அப்பீல் செய்தும் அவருக்கு அது சாதகமாக அமைந்தது.
அதேசமயம், ஹர்திக் பாண்டியா தனக்கே உரிய ஸ்டையிலில் விளையாடி, பிராட் பந்தில் இரு அருமையான பவுண்டரிகளை விளாசினார். கோலியும் பவுண்டரி அடித்து அரைசதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி இலக்கை மெதுவாக நெருங்கியது. ரசிகர்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால், 47-வது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசி இந்த நம்பிக்கையை உடைத்தார்.
விராட் கோலி முதல் இன்னிங்ஸில் கவுரமான ஸ்கோரை எட்ட முக்கியக் காரணமாக அமைந்தார், 2-வது இன்னிங்ஸிலும் வெற்றிக்குப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கையை உடைத்தார் ஸ்டோக்ஸ்.
விராட் கோலி வெளியேறியவுடன் இங்கிலாந்து வீரர்களுக்கு உத்வேகமும், புதிய நம்பிக்கையும் பிறந்துவிட்டது. அடுத்துக் களமிறங்கிய முகமது ஷமிக்கு ஒரு பவுன்சரை எழுப்பித் தொடவைத்து வெளியேற்றினார் ஸ்டோக்ஸ். ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் வீழ்ந்ததால், இந்திய அணியின் தோல்வி முடிவானது.
அடுத்து வந்த இசாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியாவுக்கு ஒத்துழைத்து ஆடினார். ஆனால் டெயில் என்டர்கள் பேட் செய்யும்போது, பேட்ஸ்மேன்கள் தங்களுக்கு ஆதரவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். முதல் இன்னிங்ஸில் இதை கேப்டன் கோலி சரியாகச் செய்து வீரர்களுக்குப் பாடம் நடத்தினார். ஆனால், இதைப் புரிந்து கொள்ளாத ஹர்திக் பாண்டியா, சாம் கரன், ராஷித் பந்துவீச்சை இசாந்த் சர்மாவை எதிர்கொள்ள வைத்தது பெரிய முட்டாள்தனமாகும்.
ஒரு பந்தில் ஒரு ரன்னை எடுக்கவைத்துவிட்டு மீதமுள்ள பந்துகளை ஹர்திக் பாண்டியா எதிர்கொண்டிருக்க வேண்டும்.அதைச் செய்யவில்லை. அந்த சூழலிலும் இசாந்த் சர்மா 2 பவுண்டரிகள் அடித்தார். ஆனால், ஆதில் ராஷித் சுழற்பந்துவீச்சுக்கு இரையாகி எல்பிடபிள்யு முறையில் இசாந்த் 11 ரன்களில் வெளியேறினார்.
அடுத்து வந்த உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியாவுடன் இணைந்தார். இப்போதும் அதேத் தவறை ஹர்திக் பாண்டியா செய்து, உமேஷ் யாதவை பந்துகளை எதிர்கொள்ளச் செய்தார். ரன்களும் சேரவில்லை. பென் ஸ்டோக்ஸ் வீசிய ஓவரில் முதல் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஹர்திக் பாண்டியா 31 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணியின் தோல்வி முடிவுக்கு வந்தது.
இந்திய அணி 54.2 ஓவர்களில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 31 ரன்களில் தோல்வி அடைந்தது. சாம் கரன் ஆட்டநாயகனாகன் ஆனார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.