முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலக பாட்மிண்டன்: ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
Image Unavailable

பெய்ஜிங் : உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டி அரையிறுதிச் சுற்றுக்கு பி.வி.சிந்து முன்னேறினார். அதே நேரத்தில் சாய்னா நெவால் தோல்வியடைந்தார்.

சீனாவின் நான்ஜிங் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில்  மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் சாய்னா, ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மரினை எதிர்கொண்டார். இதில் எந்தவித எதிர்ப்புமின்றி கரோலினா 21-6, 21-11 என நேர் செட்களில் சாய்னாவை எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். கடந்த 2015 உலக சாம்பியன்போட்டி இறுதிச் சுற்றிலும் கரோலினா எளிதாக சாய்னாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் பி.வி.சிந்து 21-17, 21-19 என்ற நேர் செட்களில் ஜப்பானின் நவோமி ஒஹுராவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் கடந்த 2017 போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சிந்து பழிதீர்த்துக் கொண்டார்.

கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சத்விக் இணை 17-21, 10-21 என நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து