முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலையுலகிலும், அரசியலிலும் கலைஞரின் அர்ப்பணிப்பு என்றும் நிலைத்திருக்கும்: நடிகர் சங்கம் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      சினிமா
Image Unavailable

சென்னை, கலை உலகிலும் திரையுலகிலும் அரசியலிலும் கலைஞரின் அர்ப்பணிப்பு என்று நிலைத்திருக்கும் என்று நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுசெயலாளர் விஷால் பொருளாளர் கார்த்தி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. தமிழ் கலைஇலக்கிய பிதாமகனும் நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினருமான கலைஞர் மறைந்த துயரச்செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறேன். வேதனை அடைகிறோம் திரைக்கதை வசன ஆசிரியராக சினிமா பிரவேசம் நடத்தி அதன் பின்னர் அரசியலுக்கு வந்து தமிழகத்தின் முதல்வராக மூன்று முறை மக்களுக்கு தொண்டாற்றியவர் ஒரு எழுத்தாளராக சினிமாவில் அவரை போல் சாதி்த்தவர் எவரும் இல்லை. சினிமாவில் அவரது வசனங்கள் ஹீரோக்களுக்கு இணையாக பேசப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் அவர் இயற்றிய சினிமா வசனங்கள் காலங்களை வென்று வாழ்பவை. அவரது திரைக்கதைகள் ஹீரோக்களையும் உருவாக்கியது.

தான் முதல்வராக இருக்கும் போது தமிழ்சினிமாவின் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தினார், கலை உலகிலும் திரையுலகிலும் அரசியலிலும் அவரது அர்ப்பணிப்பு என்றும் நிலைப்பவை அவர் இயற்றிய குறளோவியம் சங்கத்தமிழ்,பூம்புகார் நெஞ்சுக்கு நீதி, தொல்காப்பிய பூங்கா போன்ற நூல்கள் தமிழுக்கு கிடை்த்த பொக்கிஷங்கள் அவரது இழப்பு தமிழகத்திற்கும் திரையுலகிற்கும் மாபெரும் பேரிழப்பு, அன்னாரது மறைவால் துக்கத்தில் வாடும் குடும்பத்தினரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து