முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி வரும் 21-ல் தொடங்கி வைக்கிறார் மோடி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியை வரும் 21-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். தற்போது போஸ்ட் பேமெண்ட் வங்கியின் 2 கிளைகள் சோதனை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. மீதமுள்ள 648 கிளைகளை வரும் 21-ம் தேதி பிரதமர் தொடங்கி வைக்கிறார் என தொலைதொடர்பு துறையில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இந்தியாவில் 1.55 லட்சம் தபால் நிலையங்கள் உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து தபால் நிலையங்களையும் பேமெண்ட் வங்கியுடன் இணைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கும் நிதிச்சேவை கிடைக்கும். ஒவ் வொரு கிராமங்களிலும் கிளைகள் இருப்பதால் பெரும்பாலான மக் களுக்கு வங்கி சேவை வழங்க முடியும் என அவர் கூறினார்.

ஏர்டெல் மற்றும் பேடிஎம் ஆகிய நிறுவனங்களுக்கு பிறகு பேமெண்ட் வங்கி தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட மூன்றாவது நிறுவனம் இந்திய தபால் துறையாகும். ஒரு லட்சம் ரூபாய் வரையிலான டெபாசிட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

வங்கிக்கான தொடக்க நாளிலே இதன் செயலியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியின் செயலி மூலம் டெலிபோன் ரீசார்ஜ், டி.டி.ஹெச், கல்லூரி கட்டணம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து