முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி. காப்பக சிறுமிகள் வன்கொடுமை குற்றவாளிகள் தப்ப முடியாது: ராஜ்நாத்சிங்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்தரப் பிரதேச மாநிலத்தில் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இது தொடர்பாக மக்களவையில் அவர் மேலும் கூறியதாவது:-

காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமிகள் பாதிப்புக்குள்ளானது துரதிருஷ்டவசமானது. வெட்கக்கேடானது. இந்த விவகாரத்தில் மாநில அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குற்றவாளிகள் யாரும் தப்பிவிட முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நிகழாத வண்ணம் தடுக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்ப துறை சார்ந்த அதிகாரிகளிடம் வலியுறுத்துவேன் என்றார் அவர்.

இதனிடையே, பாராளுமன்ற வளாகத்தில் சமாஜ்வாடி, ராஷ்டிரீய ஜனதா தளம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் காப்பக சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பின் கீழ் விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து