எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடத்துக்குப் பின்புறம் நேற்று இரவு 7 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது தலைவர்கள், பொதுமக்கள், கருணாநிதி குடும்பத்தினர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
குடும்பத்தினர் அஞ்சலி
தி.மு.க. தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் காலமானார். காவேரி மருத்துவமனையில் இருந்து அவரது உடல் கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பிறகு கருணாநிதி உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள் வரிசையாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
ராஜாஜி அரங்கில் அஞ்சலி
பின்னர், நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு மணிக்கு கனிமொழி வசிக்கும் சி.ஐ.டி. காலனி வீட்டுக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கும் குடும்ப உறுப்பினர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி அரங்கில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று அதிகாலை முதல் திரளான தி.மு.க. தொண்டர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் மரியாதை
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர் பெருமக்கள், பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், பல மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நடிகர் ரஜினிகாந்த், சிவகுமார், சூர்யா மற்றும் பல்வேறு திரையுலகினர் அவருக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி கருணாநிதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
நடந்தே சென்ற ஸ்டாலின்
இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் கண்ணாடி பெட்டியில் வைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் ஏற்றப்பட்டது. தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள், போலீசார், பொதுமக்கள் என அனைவருக்கும் மத்தியில் அவரது இறுதி ஊர்வலம் ஊர்ந்து சென்றது. இந்த ஊர்வலத்தில் மு.க. ஸ்டாலின் நடந்தே சென்றார். இந்த இறுதி ஊர்வலம் சிவானந்தா சாலை, அண்ணா சாலை, வாலாஜா சாலை வழியாக அண்ணா நினைவிடத்திற்கு மாலை 6.15 மணியளவில் வந்து சேர்ந்தது. முன்னதாக சாலையின் இருபுறமும் தொண்டர்கள், பொதுமக்கள் கூடி நின்று கலைஞர் வாழ்க என கோஷமிட்டனர். அண்ணா நினைவிடத்துக்கு வந்த பின்னர் அவரது உடலுக்கு முப்படை வீரர்கள் மரியாதை செலுத்தினர். அதன் பிறகு கண்ணாடி பெட்டி அகற்றப்பட்டது. அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடியும் அகற்றப்பட்டது.
தலைவர்கள் அஞ்சலி
அப்போது அவரது உடலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, அமைச்சர் ஜெயகுமார், குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வரசையாக வந்து அஞ்சலி செலுத்தினர். அதன் பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து மு.க. ஸ்டாலின், அழகிரி, ராஜாத்தி அம்மாள், மகள் செல்வி, ஸ்டாலின் மனைவி துர்கா, கனிமொழி, செல்வம் மற்றும் பேரன், பேத்திகள் பூப்போட்டு கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர். கடைசியாக தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அதன் பிறகு சந்தனப்பேழையில் கருணாநிதி உடல் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு குடும்ப உறுப்பினர்கள் இறுதி சடங்கு செய்தனர். பின்னர் இரவு சரியாக 6.55 மணிக்கு சந்தனப்பேழை மூடப்பட்டது.
நல்லடக்கம்
அதை தொடர்ந்து 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் சரியாக 7 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போதும் அவரது குடும்பத்தினர் சில சடங்குகளில் ஈடுபட்டனர். கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தின் போது பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், வைகோ, திருமாவளவன், திருநாவுக்கரசர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், துரைமுருகன், திருச்சி சிவா, குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். காலையில் ராஜாஜி மண்டபத்தில் அவரது உடல் இருந்த போது திரையுலக பிரபலங்கள் அனைவரும் வந்திருந்து அஞ்சலி செலுத்தினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.