முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி மறைவு: பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று  ஒருநாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம்  மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார்.

இந்நிலையில், கருணாநிதி மறைவையொட்டி, பாராளுமன்ற இரு அவைகளும் நேற்று ஒருநாள் முழுவதும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாராளுமன்றம் நேற்று கூடியதும், இரு அவைகளிலும் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

மக்களவையில் அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனும், மாநிலங்களவையில் அவைத்தலைவர் வெங்கையா நாயுடுவும் இரங்கல் குறிப்பை வாசித்தனர். பின்னர் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து